search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த நாள் கொண்டாடிய நமச்சிவாயத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் வாழ்த்து
    X

    பிறந்த நாள் கொண்டாடிய நமச்சிவாயத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் வாழ்த்து

    பிறந்த நாள் கொண்டாடிய நமச்சிவாயத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    வில்லியனூர்:

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.

    பிறந்த நாளையொட்டி இன்று காலை புத்தாடை அணிந்து தனது பெற்றோரின் உருவ படங்கள் முன்பு வணங்கினார்.

    பின்னர் தனது மனைவி வசந்தி, மகன் சிவஹரிஷ் ஆகியோருடன் கருவடிகுப்பம் சித்தானந்தா கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் மணவெளியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு அமைச்சர் நமச்சிவாயத்துக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக் கண்ணன், ஷாஜகான், துணை சபாநாயகர் சப்தகிரி சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், ஜான்குமார், எம்.என்.ஆர். பாலன், காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஏகே.டி. ஆறுமுகம் ஆகியோரும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

    வில்லியனூர் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் அயூப், தொழில் அதிபர்கள் சப்தகிரி ராமலிங்கம், வி.பி.எஸ். ரமேஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, துணை தலைவர் சரவணன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் தனுசு, செயலாளர் சாம்ராஜ், சிறப்பு அழைப்பாளர் வக்கீல் ராமச்சந்திர மூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் குமரேஸ்வரன், மணவெளி வட்டார காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் சண்முகம், மங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் முரளிதரன், வக்கீல் மருதுபாண்டியன், வன்னியர் இளைஞர் பாதுகாப்பு இயக்கம் கணுவாப்பேட்டை ரமேஷ் என்ற சக்திவேல்,

    உழவர்கரை தொகுதி காங்கிரஸ் பிரமுகர் செல்வம் என்ற செல்வராஜ், உப்பளம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் செல்வபாண்டியன்,

    சுப்ரீம் ரியல் ஏஜென்சீஸ் தயாளன், ஓட்டல் அக்‌ஷரதா சேர்மன் அன்பு, மணக்குள விநாயகர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்திக், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சம்சுதீன், பிரபாகரன், கிருஷ்ணராஜ், பால்ராஜ், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் சஞ்சிவி, பொதுச்செயலாளர் வக்கீல் சசிபாலன்,

    புதுவை சாராயக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மாறன் என்ற கனகராஜ், துணை தலைவர்கள் செழியன், ரவி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அருள் பிரகாசம், நடன சபாபதி, ரவிச்சந்திரன், பரஞ்சோதி, குமரகுரு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், பழக்கூடை வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்த நாளையொட்டி வில்லியனூர் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இது போன்று புதுவையின் பல்வேறு தொகுதிகளிலும் அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாளை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடினார்கள்.

    அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாளையொட்டி வில்லியனூர் தொகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளையொட்டி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரெட்டியார் பாளையத்தில் உள்ள அன்பு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சத்தியவேந்தன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி அவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிவசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, வட்டார தலைவர் லட்சுமி மோகன், மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் தேவகாந்த், உழவர்கரை தொகுதி காங்கிரஸ் பிரமுகர் செல்வம் என்ற செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரன், பழனி, புகழ், சேவியர், சங்கர், நெப்போலியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×