search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நவம்பர் 24-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் பேரணி
    X

    விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நவம்பர் 24-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் பேரணி

    விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நவம்பர் 24-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை முன் நிறுத்தி டெல்லியில் நவம்பர் 24-ந் தேதி நடத்த உள்ள பேரணியில் பெருமளவில் கலந்து கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    டெல்லியில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள உடனடியாக தக்க ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். டெல்லி விவசாயிகள் பேரணி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் விவசாய மாற்று கொள்கைகள் குறித்த அகில இந்திய கருத்தரங்கை 2017-ம் ஆண்டு சென்னையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 250 பேர் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×