search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேர் கைது
    X

    பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேர் கைது

    பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணபிரபு. இவரது மனைவி சங்கீதா (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 16–ந் தேதி சங்கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் கோட்டாட்சியர் பேபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணபிரபு (38), அவரது தாய் தனபாக்கியம் (60), அண்ணன் ராஜா என்ற செந்தில்ராஜா (40), துறையூர் அருகேயுள்ள சித்திரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணபிரபுவின் அக்காள் லதா (44), இவரது கணவர் பாஸ்கர் (47) ஆகிய 5 பேர் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×