search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவர் மாயம்
    X

    மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவர் மாயம்

    மார்த்தாண்டம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46). இவரது மகன் பிரம்மோத் (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

    சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு பிரம்மோத் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர் அங்கு அவர் இல்லை. மேலும் பிரம்மோத்தை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் பிரம்மோத் இல்லாததால் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அவரது தந்தை ஜெயராஜ் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் இன்ஸ் பெக்டர் முத்துராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவர் பிரம்மோத்தை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×