என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பழனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி பழனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221947074204_Charred-husband-wife-on-fire-near-Palani_SECVPF.gif)
பழனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பழனி:
பழனி தாராபுரம் ரோட்டில் நால் ரோடு அடுத்து உள்ளது பெரிச்சிபாளையம் இந்த ஊரின் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சலாம் உசேன் (வயது 25) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.அவரது மனைவி நந்தினி என்ற பானு (21). 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் 2 பேரும் தாராபுரத்தில் 5 வருடங்களும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடமாக சலாம் உசேனுக்கு சொந்த ஊரான பெரிச்சிபாளையத்தில் வசித்து வருகின்றனர். நேற்று பகல் மண்எண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக 2 பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .மிகுந்த ஆபத்தான நிலையில் இருந்த அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)