என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![டெங்கு விழிப்புணர்வு முகாம்: காய்ச்சல் தென்பட்டால் விழிப்புணர்வுடன் சிகிச்சை பெறவேண்டும் கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தல் டெங்கு விழிப்புணர்வு முகாம்: காய்ச்சல் தென்பட்டால் விழிப்புணர்வுடன் சிகிச்சை பெறவேண்டும் கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தல்](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221822010331_Dengue-Awareness-Camp-Collector-Annadurai-instruction-near_SECVPF.gif)
டெங்கு விழிப்புணர்வு முகாம்: காய்ச்சல் தென்பட்டால் விழிப்புணர்வுடன் சிகிச்சை பெறவேண்டும் கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்று பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்களிடையே டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகிற இடங்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீடுகளில் திறந்த தண்ணீர் தொட்டிகள், தேங்காய் மட்டைகள், ஆட்டுக்கல், காலியான பெயிண்ட் டப்பாக்கள், டயர் போன்ற இடங்களில் தான் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. எனவே, வீடுகளில் பயன்படுத்தப்படும் திறந்தவெளி நீர்தொட்டிகளில் உள்ள நீரினை 3 நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படா வண்ணம், பாலிதீன் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவத்துறை மூலமாக வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தினை பொது மக்கள் பெற்று பருக வேண்டும். தங்கள் வீட்டிலேயே பப்பாளி இலைகளை கொண்டு சாறு தயாரித்து பருகலாம். காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, மருத்துவர்கள் ஜெயபிரகாஷ், செல்வம், ஜெயபாஸ்கர், சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)