search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: பிளஸ்-2 மாணவன் பலி
    X

    லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: பிளஸ்-2 மாணவன் பலி

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை கண் முன்பு பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி. நகைபட்டறை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் பாலஅய்யப்பன் (வயது 17) அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று இரவு 9.40 மணி அளவில் ரவி, பாலஅய்யப்பன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே பூம்புகார் எதிர்புறம் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சென்ற லாரி இவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பாலஅய்யப்பன் சாலையில் விழுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது.

    இதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் ரவியும் காயமடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தந்தை கண் முன்பு மகன் பலியான இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×