search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

    விருதுநகரில் சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 47 துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சம்பள நிலுவையை உடனே வழங்க கோரி இன்று விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பு 47 துப்புரவு தொழிலாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகரசபை தலைவர் சாந்தி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பள நிலுவை விரைவில் வழங்கப்படும். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்தார். இதையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×