search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சங்கரேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன.

    சங்கரரேஸ்வரிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதில் முற்றிலும் கருகிய நிலையில் கிடந்தவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×