என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்6 Aug 2016 2:45 PM GMT (Updated: 6 Aug 2016 2:45 PM GMT)
குன்னம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 79). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவையிலிருந்து சங்கரன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். பின்னர், அவர் தனது அண்ணன், மகன், மகள் உள்ளிட்ட உறவினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் அவ்வப்போது தங்கி இருந்தார். நேற்று முன்தினம் முதியோர் உதவித்தொகை வாங்கிய சங்கரன் அந்த பணத்தில் மது பாட்டில்களை வாங்கினார். குன்னம் அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த சங்கரன் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சங்கரன் இறந்து கிடப்பது பற்றி குன்னம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்கரன் மகன் ஜெயக்கண்ணன் (43) மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மதுவில் விஷம் கலந்து குடித்து சங்கரன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 79). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவையிலிருந்து சங்கரன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். பின்னர், அவர் தனது அண்ணன், மகன், மகள் உள்ளிட்ட உறவினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் அவ்வப்போது தங்கி இருந்தார். நேற்று முன்தினம் முதியோர் உதவித்தொகை வாங்கிய சங்கரன் அந்த பணத்தில் மது பாட்டில்களை வாங்கினார். குன்னம் அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த சங்கரன் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சங்கரன் இறந்து கிடப்பது பற்றி குன்னம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்கரன் மகன் ஜெயக்கண்ணன் (43) மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மதுவில் விஷம் கலந்து குடித்து சங்கரன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X