search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

    வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது.

    இடி, மின்னலுடன் சிறிது நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒரு சில பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செ.மீ மழை பெய்துள்ளது.

    அறந்தாங்கி, பட்டுக்கோட்டை,புழல், திருத்துறைப்பூண்டி, பொன்னேரியில் தலா 3 செ.மீ சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×