search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
    X

    பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

    கொப்பக்கரை கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் ஈடுபட்டனர்.
    பொம்மிடி:

    பொம்மிடி அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×