search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது
    X

    கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது

    போலீசார் நேற்றிரவு கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற கூலித்தொழிலாளியிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் போலீசார் நேற்றிரவு கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மதுரை செல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (வயது63) கூலித்தொழிலாளி என்பதும் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×