search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை
    X

    கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை

    கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.கலைசெல்வன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கலைசெல்வன் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கோவை கிணத்துக்கடவு அருகே சொல்வம்பாளையத்தில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று அவர் அப்பகுதியில் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில், நேற்று முன்தினம் கலை செல்வனின் தாயார் அவரிடம் போனில் பேசியதும், அப்போது கடன் வாங்கியதற்காக கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×