என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291849118556_credit-issue-of-worker-suicides_SECVPF.gif)
கடன் பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவை:
திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.கலைசெல்வன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர்.
இந்தநிலையில் கலைசெல்வன் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கோவை கிணத்துக்கடவு அருகே சொல்வம்பாளையத்தில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று அவர் அப்பகுதியில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், நேற்று முன்தினம் கலை செல்வனின் தாயார் அவரிடம் போனில் பேசியதும், அப்போது கடன் வாங்கியதற்காக கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)