search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
    X

    அரக்கோணம் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

    அரக்கோணம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அல்லியப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 21). இவர் திருத்தணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், வளர்புரம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் (23) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 16–ந் தேதி முனியம்மாள், விநாயகம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, 22–ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடுவதை அறிந்த முனியம்மாள், விநாயகம் இருவரும் நேற்று காலை அரக்கோணம் தாலுகா போலீசில் தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் எனக்கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×