search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடியில் சப்–இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு
    X

    மன்னார்குடியில் சப்–இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு

    மன்னார்குடியில் சப்–இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ஹெல்மெட் அணிந்த 2 பேர் நகையை பறித்து சென்றனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கீழ் பாலம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவர் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெற்றிசெல்வி (45).இவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக வந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் வந்தனர்.

    திடீரென அவர்கள் வெற்றி செல்வியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மன்னார்குடி போலீசில் வெற்றி செல்வி புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×