என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இறுதிக்கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 வருடங்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை ஐகோர்டடு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றவாளிகளை பிடிக்க காலஅவகாசம் மட்டும் கேட்டு வந்தனர். இது பலமுறை தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதற்கு மறுத்த நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கில் இறுதியாக 6 வாரகாலம் மட்டும் தான் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு அவகாசம் வழங்க முடியும். ஆகஸ்டு மாதம் 8–ந் தேதி குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு தவறினால், இந்த வழக்கில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்