search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இறுதிக்கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இறுதிக்கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டு பிடிக்க மதுரை ஐகோர்ட்டு இறுதிக்கெடு விதித்து உள்ளது.

    மதுரை:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 வருடங்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை ஐகோர்டடு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இதன் விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றவாளிகளை பிடிக்க காலஅவகாசம் மட்டும் கேட்டு வந்தனர். இது பலமுறை தொடர்ந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அதற்கு மறுத்த நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கில் இறுதியாக 6 வாரகாலம் மட்டும் தான் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு அவகாசம் வழங்க முடியும். ஆகஸ்டு மாதம் 8–ந் தேதி குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு தவறினால், இந்த வழக்கில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்

    Next Story
    ×