search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவாதியை கொன்ற கொலையாளியின் தெளிவான போட்டோ தயாரானது இன்று மாலை புதிய படங்கள் வெளியீடு
    X

    சுவாதியை கொன்ற கொலையாளியின் தெளிவான போட்டோ தயாரானது இன்று மாலை புதிய படங்கள் வெளியீடு

    சுவாதியை கொன்ற கொலையாளியின் தெளிவான புதிய படங்கள் இன்று மாலை வெளியிடப்படும் என்று தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.


    சுவாதி கொலை தொடர்பாக போலீசுக்கு கிடைத்திருக்கும் முக்கிய ஆதாரம் வீடியோ காட்சிகள் மட்டுமே. அதில் இடம் பெற்றிருக்கும் நபரின் உருவத்தையும், வீடியோ காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர். ஆனால் அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை.

    இதுவும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளியின் உருவத்தை மிகவும் தெளிவாக மாற்றும் தொழில் நுட்ப உதவியை போலீசார் நாடியுள்ளனர். கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியும் அளவிலான புதிய போட்டோ ஒன்று தயாராகியுள்ளது.

    இதனை தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கர் தெரிவித்தார். அந்த புதிய புகைப்படங்கள் இன்று மாலை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×