என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சுவாதியை வெட்டிக் கொன்று விட்டு கத்தியுடன், கொலையாளி தப்பி ஓடும் 17 நிமிட பரபரப்பான வீடியோ காட்சி சுவாதியை வெட்டிக் கொன்று விட்டு கத்தியுடன், கொலையாளி தப்பி ஓடும் 17 நிமிட பரபரப்பான வீடியோ காட்சி](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291157295777_Chennai-nungambakkam-railway-station-engineer-swathi-murder_SECVPF.gif)
X
சுவாதியை வெட்டிக் கொன்று விட்டு கத்தியுடன், கொலையாளி தப்பி ஓடும் 17 நிமிட பரபரப்பான வீடியோ காட்சி
By
மாலை மலர்29 Jun 2016 6:27 AM GMT (Updated: 29 Jun 2016 6:27 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதியை வெட்டிக்கொன்று விட்டு கத்தியுடன், கொலையாளி தப்பி ஓடும் 17 நிமிட பரபரப்பான வீடியோ காட்சி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
சுவாதி கொலை வழக்கில் போலீசுக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பது வீடியோ காட்சிகள் மட்டுமே. சுவாதி கொலையுண்ட கடந்த 24-ந்தேதி அன்று, காலை 6.30 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தினுள் கொலையாளி இருந்துள்ளான்.
சரியாக 6.32 மணிக்கு ரெயில் நிலையத்தில் கொலையாளி நுழைகிறான். இந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பின்னர் சுவாதியை கொலை செய்துவிட்டு 2-வது தண்டவாளத்தில் இருந்து குதித்து தண்டவாளம் வழியாக ஓடி முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி உள்ளான். பின்னர் முதல் நடைமேடையில் அவன் வேகமாக தப்பி ஓடுகிறான்.
இடது கையில் கத்தியுடன் வலது கையை வேகமாக வீசிக் கொண்டு அவன் தப்பி ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. அப்போது எதிர் திசையில் வாலிபர் ஒருவர் வருகிறார். அவர் கொலையாளி மின்னல் வேகத்தில் ஓடுவதை பார்த்ததும், மிரண்டு போய் விடுகிறார். தன்னை கடந்து கத்தியுடன் ஓடும் நபரை பார்த்ததும், திகில் அடையும் அவர் தப்பி ஓடும் கொலையாளியை 3 முறை திரும்பி பார்க்கிறார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. கொலையாளியை நேரில் பார்த்த இந்த வாலிபர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் போலீசுக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பது வீடியோ காட்சிகள் மட்டுமே. சுவாதி கொலையுண்ட கடந்த 24-ந்தேதி அன்று, காலை 6.30 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தினுள் கொலையாளி இருந்துள்ளான்.
சரியாக 6.32 மணிக்கு ரெயில் நிலையத்தில் கொலையாளி நுழைகிறான். இந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பின்னர் சுவாதியை கொலை செய்துவிட்டு 2-வது தண்டவாளத்தில் இருந்து குதித்து தண்டவாளம் வழியாக ஓடி முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி உள்ளான். பின்னர் முதல் நடைமேடையில் அவன் வேகமாக தப்பி ஓடுகிறான்.
இடது கையில் கத்தியுடன் வலது கையை வேகமாக வீசிக் கொண்டு அவன் தப்பி ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. அப்போது எதிர் திசையில் வாலிபர் ஒருவர் வருகிறார். அவர் கொலையாளி மின்னல் வேகத்தில் ஓடுவதை பார்த்ததும், மிரண்டு போய் விடுகிறார். தன்னை கடந்து கத்தியுடன் ஓடும் நபரை பார்த்ததும், திகில் அடையும் அவர் தப்பி ஓடும் கொலையாளியை 3 முறை திரும்பி பார்க்கிறார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. கொலையாளியை நேரில் பார்த்த இந்த வாலிபர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)