search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி-கணவர் படுகாயம்
    X

    தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி-கணவர் படுகாயம்

    தியாகதுருகம் அருகே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
    தியாகதுருகம்:

    தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி பார்வதி(24). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. தர்ஷன் என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளது.

    குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி மணிமாறனும், பார்வதியும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.

    தியாகதுருகம் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிமாறன், பார்வதி, தர்ஷன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பார்வதி பரிதாபமாக இறந்தார்.

    மணிமாறன், தர்ஷன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×