search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்களில் சட்டவிரோதமாக இருக்கைகள் ஆக்கிரமிப்பு: புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு
    X

    மின்சார ரெயில்களில் சட்டவிரோதமாக இருக்கைகள் ஆக்கிரமிப்பு: புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு

    மின்சார ரெயில்களில் சட்டவிரோதமாக பயணம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ரெயில்வே ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மின்சார ரெயில்களில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் சிலர் இருக்கைகளை ஆக்கிரமித்து சட்டவிரோத பயணம் செய்வதாக மின்சார ரெயில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சட்டவிரோதமாக பயணம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ரெயில்வே ஹெல்ப்லைன் எண்களை பயணிகள் தொடர்புகொள்ளலாம்.

    ரெயில்வே பாதுகாப்பு படை எண் 182, புகார் பிரிவு 138, சென்னை கோட்டம் 044-25354457, தலைமை வணிக மேலாளருக்கான சிறப்பு அதிகாரி 044-25354405 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×