என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி
Byமாலை மலர்16 May 2016 1:49 PM GMT (Updated: 17 May 2016 5:38 AM GMT)
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாகவும், குறிப்பாக சென்னையில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடி உள்ள பகுதியில் ஒருசில அடிதடி சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் போலீசார் அதனை முறியடித்ததால் வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் அதிக அளவிலும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக மாலை 3 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது.
இந்த தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிடலாம்” என்றார்.
தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடி உள்ள பகுதியில் ஒருசில அடிதடி சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் போலீசார் அதனை முறியடித்ததால் வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் அதிக அளவிலும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக மாலை 3 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது.
இந்த தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிடலாம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X