search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் வாக்களித்தார் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
    X

    பெரம்பலூரில் வாக்களித்தார் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

    தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெரம்பலூரில் வாக்களித்தார்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 232 தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோல், முக்கிய அரசியல் தலைவர்கள் காலை முதலே விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

    இதனிடையே, சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

    அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் உள்ள தீயத்தூர் ஊராட்சியின் வாக்கை பதிவு செய்தார். நடிகரும், வேட்பாளருமான கருணாஸ் சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்.

    பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வாக்களித்தார்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மேற்கு மாம்பழம் பகுதியிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ஞானதேசிகன் ஆழ்வார்பேட்டை பகுதியிலும் வாக்களித்தனர்.

    மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ராயப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    Next Story
    ×