search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யம்பேட்டையில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
    X

    அய்யம்பேட்டையில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

    அய்யம்பேட்டையில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் போலீசார் விசாரணை

    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை மதகடி பஜாரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பாபநாசத்திலிருந்து தஞ்சை நோக்கி மணல் ஏற்றிய லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. அதனை மடக்கி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் மணக்கரம்பை அரசூரை சேர்ந்த சுதாகர் (வயது29) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் பள்ளியக்ரகாரம் ராஜா நகரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×