search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் பைக் விபத்தில் புதுமாப்பிள்ளை சாவு
    X

    செய்யாறில் பைக் விபத்தில் புதுமாப்பிள்ளை சாவு

    பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    செய்யாறு:

    செய்யாறு வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 26). செய்யாறு– மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி திவ்யா (24). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கமலக்கண்ணன் நேற்றிரவு பணி முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார்.

    செய்யாறு– காஞ்சீபுரம் சாலையில் பள்ளி கிராமம் அருகே வந்தபோது, பைக்கில் இருந்து திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். கமலக்கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×