search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
    X

    செய்யாறில் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

    செய்யாறில் பேனா கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). இவர், செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான காய்கறி கடை பக்கம் நின்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்குவந்த கண்ணியம் நகரை சேர்ந்த இளையராஜா (37) என்பவர் திடீரென மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை காட்டி முனுசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

    முனுசாமி பணம் தரமறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, கத்தி முனையில் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.300 பணத்தை தாமாகவே எடுத்துக் கொண்டார்.

    இதை கவனித்த அங்கிருந்த சிலர் இளையராஜாவை தட்டிக் கேட்டனர். அவர்களை இளையராஜா தாக்கினார். இதில், பணத்தை பறிகொடுத்த முனுசாமியின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து இளையராஜா அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளைய ராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பேனா கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×