search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற பிளஸ்–2 மாணவர்
    X

    விழுப்புரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற பிளஸ்–2 மாணவர்

    9–ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற பிளஸ்–2 மாணவர் போலீசார் விசாரணை

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சர்மா (வயது 17). பிளஸ்–2 படித்து தற்போது தேர்வு எழுதியுள்ளார்.

    அதே பள்ளியில் பங்காரம் கிராமத்தை சேர்ந்த மாணவி 9–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியும், சர்மாவும் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

    இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மாணவியை பள்ளிக்கு அனுப்பவில்லை. காதலியை பார்க்க முடியாமல் சர்மா தவித்துவந்தார். நேற்று காதலியின் வீட் டிற்கு சென்ற சர்மா அங்கு தனியாக இருந்த காதலியை கடத்தி சென்று விட்டார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தொட்டியம் பள்ளியில் படித்த மாணவன் சர்மா தனது மகளை கடத்தி சென்றுள்ளதாகவும் அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 9–ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற சிறுவனையும் அந்த மாணவியையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×