என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காரியாபட்டி அருகே லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி காரியாபட்டி அருகே லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2016/Apr/201604101254276622_Car-crash-2-kills-near-karaiyapatti_SECVPF.gif)
X
காரியாபட்டி அருகே லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி
By
மாலை மலர்10 April 2016 7:24 AM GMT (Updated: 10 April 2016 7:24 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காரியாபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
காரியாபட்டி:
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது45). இவரது சகோதரர் காந்திமதிநாதன் (35). ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகும்.
அங்கு நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் காரில் புறப்பட்டனர். உறவினர் குமார் (25) என்பவர் காரை ஓட்டினார்.
இன்று காலை 7.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பை–பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காந்திமதிநாதனும், டிரைவர் குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த பத்மநாபன் காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது45). இவரது சகோதரர் காந்திமதிநாதன் (35). ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகும்.
அங்கு நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் காரில் புறப்பட்டனர். உறவினர் குமார் (25) என்பவர் காரை ஓட்டினார்.
இன்று காலை 7.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பை–பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காந்திமதிநாதனும், டிரைவர் குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த பத்மநாபன் காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)