search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த மாமியார் உள்பட 2 பேர் கைது
    X

    பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த மாமியார் உள்பட 2 பேர் கைது

    • ஜீவிதாவை மாமியார் சுந்தரம்மாள், மணிகண்டனின் தம்பி ஹரி ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • போலீசார் ஹரி மற்றும் சுந்தரம்மாள் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் ஜீவிதா (வயது 24) இவருக்கும், மாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33) என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    மேலும் ஜீவிதாவை மாமியார் சுந்தரம்மாள், மணிகண்டனின் தம்பி ஹரி ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜீவிதா பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஹரி மற்றும் சுந்தரம்மாள் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×