search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே 19-ம் தேதிக்கு முன்பாக தஞ்சாவூர்-அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த்
    X

    மே 19-ம் தேதிக்கு முன்பாக தஞ்சாவூர்-அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த்

    தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 19-ம் தேதிக்கு முன்பாக தேர்தலை நடத்த வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை  19-ம் தேதி நடைபெற உள்ளது

    எனவே, ஒத்திவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கும் 19-ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் . தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.

    இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் நடத்தவில்லை என்றும், பண விநியோகம் தொடர்பான புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    2 தொகுதிகளுக்கான தேர்தலை 19-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×