search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாட்களில் மக்களின் தீர்ப்பு தெரியும்: வாக்களித்த பின் முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி
    X

    2 நாட்களில் மக்களின் தீர்ப்பு தெரியும்: வாக்களித்த பின் முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி

    தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான வாக்களித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 நாட்களில் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று தெரிவித்தார். முன்னதாக இதே வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

    திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலும், பொருளாளர் முக.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
    Next Story
    ×