search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுசூதனன் இன்று சந்திப்பு
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுசூதனன் இன்று சந்திப்பு

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.



    இவர் இந்த தொகுதிக்கு நன்கு பரீட்சயமானவர். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்றவர். அந்த அடிப்படையில் இவரை நிறுத்தினால் தங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கருதியுள்ளனர்.



    ஆர்.கே.நகர் தொகுதியிலேயே மதுசூதனன் வசித்து வருவதால் அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதால் முதலில் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க அவர் திட்டமிட்டு இன்று முதல் களத்தில் இறங்கியுள்ளார்.

    முன்னதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மதுசூதனன் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, பகுதி செயலாளர் மகிழன்பன், ராயபுரம் பழனி.

    பேரவை செயலாளர் ராஜேஷ், மாணவர் அணி செயலாளர் டேவிட் ஞானசேகரன், முன்னாள் கவுன்சிலர் வின்சென்ட், பேரவை இளைஞரணி வெற்றிவேந்தன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் முக்கிய நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து வருகிறார்.
    Next Story
    ×