search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநர் வித்யாசாகர் ராவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் ஸ்டாலின்
    X

    ஆளுநர் வித்யாசாகர் ராவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் ஸ்டாலின்

    ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
    சென்னை:

    ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். இதனையடுத்து,

    ஆளுநர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை. இதனால் தமிழக அரசியல் நிலவி வரும் பரபரப்பான சூழல் தொடர்ந்து நீடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

    இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இதனை தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.
    Next Story
    ×