என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம் அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101434149572_AIADMK-presidium-chairman-E-Madhusudhan-removed-from-his_SECVPF.gif)
X
அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்
By
மாலை மலர்10 Feb 2017 9:04 AM GMT (Updated: 10 Feb 2017 9:04 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
சென்னை:
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.
நேற்று முதல் மதுசூதனன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா பொதுச் செயலாளராக இருப்பது முறையற்றது என்ற கருத்தினை தெரிவித்தார்.
இந்நிலையில், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் இ.மதுசூதனன் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
![](/uploads/ECA85E19-2D84-41B4-86C8-D29EDEA6F53E_L_styvpf.gif)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், “என்னை யாரும் நீக்க முடியாது, என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று கூறினார்.
மேலும், “கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் சசிகலாவை நீக்கி விட்டேன்” என்று தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.
நேற்று முதல் மதுசூதனன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா பொதுச் செயலாளராக இருப்பது முறையற்றது என்ற கருத்தினை தெரிவித்தார்.
இந்நிலையில், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் இ.மதுசூதனன் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
![](/uploads/ECA85E19-2D84-41B4-86C8-D29EDEA6F53E_L_styvpf.gif)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், “என்னை யாரும் நீக்க முடியாது, என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று கூறினார்.
மேலும், “கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் சசிகலாவை நீக்கி விட்டேன்” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)