search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்னீர்செல்வம் விவகாரம்: வைகோ கருத்து கூற மறுப்பு
    X

    பன்னீர்செல்வம் விவகாரம்: வைகோ கருத்து கூற மறுப்பு

    மதுரைக்கு விமானம் மூலம் இன்று வருகை தந்த வைகோவிடம் நிருபர்கள், பன்னீர்செல்வம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளார்.

    அவனியாபுரம்:

    மதுரைக்கு விமானம் மூலம் இன்று வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கருவேல மரங்களால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கருவேல முள் செடிகளை கால்நடைகள் உண்பதால் மலட்டு தன்மையும் ஏற்படுகிறது. ஜல்லிக் கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல் கருவேல மரங்களை அகற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

    காவிரி நதிநீர் பிரச்சினை குறித்த வழக்கு வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வைகோவிடம், ஓ.பன்னீர் செல்வம் புகார் குறித்து கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    Next Story
    ×