search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்கட்சிகளுக்கு பதில் அளிக்க ஆதாரங்களை சமர்ப்பித்த ஜெயலலிதா: சபாநாயகர் பெருமிதம்
    X

    எதிர்கட்சிகளுக்கு பதில் அளிக்க ஆதாரங்களை சமர்ப்பித்த ஜெயலலிதா: சபாநாயகர் பெருமிதம்

    எதிர்கட்சிகளுக்கு பதில் அளிக்க தக்க ஆதாரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா சமர்ப்பித்ததாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா போலீஸ் மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்தார்.

    முதல்-அமைச்சரின் அறிவிப்புகளுக்கு சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்தார். அப்போது சபாநாயகர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் இன்று காவல்துறை மானியம் கோரிக்கையை தாக்கல் செய்ய வரும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்னென்ன பதில் கூற வேண்டும் என்பதற்கான தக்க ஆதாரங்களை என்னிடம் கொடுத்து அனுமதி பெற்று பதில் அளிக்க தயாராக வந்திருந்தார்.

    ஆனால் எதிர்க்கட்சியினர் சரியாக பணியாற்றாததால் அந்த ஆதாரங்களை அம்மா பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

    அப்போது தன்னிடம் தெரிவித்திருந்த ஆதாரங்களை சபாநாயகர் அவையில் காண்பித்தார்.

    தொடர்ந்து சபாநாயகர் கூறுகையில், முன் உதாரணமாக அவையில் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக முதல்- அமைச்சர் அம்மா ஆதாரங்களை கொடுத்து சபையில் பதிலுரையில் தெரிவிக்க வேண்டும் என வந்துள்ளார்.

    சட்டமன்றத்தில் ஜனநாயகம் தலைசிறந்து விளங்க முன் உதாரணமாக திகழ்ந்த அம்மாவுக்கு நன்றி’’ என்றார்.
    Next Story
    ×