என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி](https://img.maalaimalar.com/Articles/2016/May/201605161414307985_Extending-polling-time-will-decide-after-3-pm-results-rajesh_SECVPF.gif)
X
வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி
By
மாலை மலர்16 May 2016 8:44 AM GMT (Updated: 16 May 2016 8:44 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மழை பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மழை பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேர நிலவரப்படி 42.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மழை பாதித்த 8-க்கும் அதிகமான இடங்களில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளது.
டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பாதிப்பு இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தினை நீட்டிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மழை நின்று இருப்பதால் 3 மணி நேர நிலவரத்தை பார்த்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
மின் தடை உள்ள பகுதியில் மாற்று அவசர விளக்குகள் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
மழை பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேர நிலவரப்படி 42.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மழை பாதித்த 8-க்கும் அதிகமான இடங்களில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளது.
டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பாதிப்பு இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தினை நீட்டிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மழை நின்று இருப்பதால் 3 மணி நேர நிலவரத்தை பார்த்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
மின் தடை உள்ள பகுதியில் மாற்று அவசர விளக்குகள் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)