என் மலர்
மேற்கு வங்காளம்
- மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது.
- ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை.
2024-2025 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது, மக்களுக்கு எதிரான பட்ஜெட், மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு, தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கம், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது, தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு. பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதமாக குறைப்ப உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.
- மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.
- 'அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது'
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்களால் கடந்த வாரம் முதல் கடுமையான போரட்டம் முன்னெடுக்கப்பட நிலையில் போராட்டம் கலவரமாக மாறி பல வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.


இந்த வன்முறையில் 133 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது . இந்நிலையில் இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.
இருப்பினும் போரட்டம் இன்னும் அடங்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.வங்காளதேச மக்கள் இந்த போராட்டதால் ஆபத்தான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் வங்கதேச எல்லையில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று நடந்த பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவரும் வங்கதேச மக்களுக்கு தங்கள் மாநிலத்தில் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.

இந்நிலையில் மம்தா வங்காள தேசத்தினருக்கு அடைக்கலம் தருவதாக வாக்களித்துள்ளது பாஜகவுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் அமித் மாளவியா, அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது என்றும் மேற்கு வங்காளம் முதல் ஜார்கண்ட் வரை வங்காளதேசத்தினரை குடியமர்த்தி தேர்தலில் வெற்றி பெற இந்தியா கூட்டணி வகுத்த சதித் திட்டம் இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
- மேற்கு வங்காளத்தில் இன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் அங்கு பேரணி நடைபெறுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
கொல்கத்தா நகரில் எஸ்பிளனேடு பகுதியில் தர்மதலா என்ற இடத்தில் நடக்கும் பேரணியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தப் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே.
தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர்.
ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள்தான் என தெரிவித்தார்.
- உ.பி.யின் கோண்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
- இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கொல்கத்தா:
உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோண்டா ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று நடந்த மற்றொரு சோகமான ரெயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைகிறேன்.
மற்றொரு ரெயில் தடம் புரண்டது. இந்த முறை சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ். ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்கிறது இந்திய அரசு? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்?!"
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும்.
- நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம்.
மக்களவை தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாத காரணத்தினால் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. கட்சியின் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) பிரிவை நீக்க வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்காள மாநில பாஜக கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் தேசியஅளவிலான முஸ்லிம்களுக்காக பேசினேன். நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம். ஆனால், இனிமேல் அவ்வாறு நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சிறுபான்மையினர் பிரிவு தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. தேசத்திற்காகவும், மேற்கு வங்காள மாநில நலத்துடன் இருப்பவர்களுடன் நாம் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுடன் நிற்காதவர்கள், தேசம் மற்றும் மேற்கு வங்காள நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். மேலும், மம்தா பானர்ஜியைப் போல மக்களைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்து பார்க்கக் கூடாது. இந்தியர்களாக பார்க்க வேண்டும். பிரதமரின் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்பதில் என்னை உள்ளடக்கியுள்ளேன் என்றார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள்.
2014-ல் சப்கா சாத் சப்கா விகாஸ் என இருந்து பாஜக முழக்கம், 2019-ல் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் ஆக இருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜிஹாதி குண்டர்களால் பல இடங்களில் இந்துக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
- ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
- கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.
இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.
- நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது
- மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம் நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது.
- காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது.
- ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரெயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் கேட் மூடும்போது ரெயில் பாதையில் கார் ஒன்று மாட்டிக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த ரெயில் காரின் பின்புறத்தில் மோதியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஹஸர்துவாரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததாலும், காரில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும், ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
லெவல் கிராசிங் கேட்டை வேகமாக கடக்க முற்பட்டபோது இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு காரை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விபத்திற்கு அடுத்து, லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கிழக்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
- மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
- ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.
மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகள் பாஜக-விடம் இருந்தது. இந்த நான்கு தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக நிலை உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் "நாடு முழுவதும் பாஜவுக்கு எதிரான நிலை உள்ளது. மத்திய பிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவு இல்லை. மக்களவை தேர்தலில் பாஜக முழு மெஜாரிட்டி பெறவில்லை.
மக்கள் முடிவு அவர்களுக்கு எதிராக உள்ளது. இதனால் தற்போது மீண்டும் ஏஜென்ஸி ராஜ்ஜியத்தை கையில் எடுத்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவு மக்களின் வெற்றி. இந்த வெற்றி, மக்கள் மீதான சமூகப் பொறுப்புக்கான கட்சியின் அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும்" என்றார்.
- கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது
- இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது
ஐஸ்கிரீமில் மனித விரல், குளோப்ஜாமுனில் கரப்பான் பூச்சி, மெஸ் உணவில் பாம்பு என சமீப காலங்களாக இந்தியாவில் ஹோட்டல்கள், ரயில்வே உணவுகளின் தரம் கீழிறங்கிக்கொண்டே வருவதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணிக்கும்போது மக்கள் பெருமபாலும் ஐஆர்சிடிசி தயாரிக்கும் உணவையும், ரயில் நிலையங்களின் உள்ளே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பப்ஸ் இந்தியர்களின் நொறுக்குத் தீனி உணவுகளில் முன்னிலையில் உள்ளது. அந்த பப்சுக்கே இப்போது வந்துள்ள சோதனையை யாரிடம் சொல்வது என இணயவாசிகள் நொந்துகொள்கின்றனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை படப்பிடித்து ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது.
Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ? byu/Aggressive_Basil923 inkolkata
- கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர்- மம்தா பானர்ஜி.
- ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தது.
மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஆனந்த போஸ்க்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தால் கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கவர்னர் மாளிகை கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும், கவர்னர் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டியதற்கு ஆளுநரின் வழக்கறிஞர் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதி கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
செய்திகள் வெளியான அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குறிப்பிட்டுள்ள செய்திகளை வெளியிட்டவர்களின் பெயர் மனுவில் இடம் பெறவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு ஆளுநரின் வழக்கறிஞர், அது தொடர்பான விவரங்களை இணைத்து மனுதாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2-ந்தேதி ஆளுநர் மாளிகை ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொத்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியது.
இதனைத் தொடர்நது ஜூன் 27-ந்தேதி மம்தா பானர்ஜி அவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானது. அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவின்படி, ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது.
- திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர்.
- இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் மேற்குவங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் நிலவுவதாக விமர்சித்தனர்.
மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.
சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து மேற்குவங்கத்தில் தலிபான் கலாச்சாரம் நிலவுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தில் நடந்துள்ளது
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தஜிமுல் இஸ்லாம் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் ஊருக்கு திரும்பிய போது அவள் தனது கணவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
அந்த பணத்தை அப்பெண் கட்ட தவறியதால் தஜிமுல் இஸ்லாம் அப்பெண்ணை தாக்கியுள்ளார். தஜிமுல் இஸ்லாம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருணால் கஹோஷ் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். மேற்குவங்கத்தில் இத்தகைய சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்றும் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.






