என் மலர்
மேற்கு வங்காளம்
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
- வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

அக்கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடினர். பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்கிராவில் பல அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டு சூறை யாடப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் எம்.பி.யின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் 4 பேர் இறந்தனர்.

போக்ராவில் உள்ள அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் 2 தலைவர்களின் உடல் களை கண்டெடுத்தனர். லால்மோனிர்ஹாட்டில், மாவட்ட அவாமி லீக் இணைப் பொதுச் செயலா ளர் சுமன் கான் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அங்கு 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
- இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
- 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'
வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.
கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
- எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்.
- இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதனால் இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லண்டன் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி "வங்காள மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.
இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும். மேலும் மேற்கு வங்காள மாநிலத்திலேயே அல்லது நாட்டிலோ அமைதியை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். சில பாஜக தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். அதை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- வனத்துறை அதிகாரி மனிஷா சாகு என்பவரை உள்ளூர் மக்களுக்கு மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ வெளியானது
- அகில் கிரிக்கு அவரது சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.
திரிணாமுல் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க சிறைத்துறை அமைச்சர் அகில் கிரி, பெண் வனத்துறை அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், தாஜ்பூர் பகுதியில் வனத்துறை அதிகாரியாக உள்ள மனிஷா சாகு என்பவரை உள்ளூர் மக்களுக்கு மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியும், கட்டையால் அடிப்பேன் என்றும், பதவியை பறிப்பேன் என்றும் மிரட்டல் விடுப்பது பதிவாகியுள்ளது.
முன்னதாக தாஜ்பூர் கடற்கரையை ஒட்டிய வனத்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை மனிஷாவின் குழுவினர் அகற்றியதே அமைச்சரின் இந்த கோபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அகில் கிரிக்கு அவரது சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.
முதலமைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அகில் மன்னப்பு கேட்ட வேண்டும் இலையென்றால் உடனே பதவி விலகும்படி வலியுறுத்தியது. எனவே தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட மறுத்துள்ள அகில் கிரி, சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தற்போது ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அகில் கிரியை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் தோற்றம் குறித்து பேசி அகில் கிரி சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது
- ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது
- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த வரி விதிப்பை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வாரியானது மக்கள் விரோத வரி என்று மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது முற்றிலும் மக்கள் விரோதமானது, உயிர்க் காப்பீடு திட்டங்களின் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வாரியானது சாமானிய மக்களுக்கு சுமையாக அமையும். மேலும் இது அவர்களிடையே அச்சத்தை விளைவிக்கும்.
இது புதிதாக யாரும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டடத்தில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தும். அவர்களின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை இந்த வரி விதிப்பானது தகர்க்கும். எனவே என்ன விலை கொடுத்தும் இந்த வரியை உடனே ரத்து செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே இந்த வரி விதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது பேசுபொருளானதையும் பார்க்க வேண்டி உள்ளது. இதற்கிடையில் நேற்று மக்களவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இருந்து காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிரித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.


- இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
- கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரெயில் ஜார்கண்ட் மாநிலத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
- ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஜார்கண்டில் அருகே தடம் புரண்டது.
- வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் ஏற்படுகின்றன
மேற்கு வங்க தலைநகர் கால்கத்தாவிலுள்ள ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரெயிலுடன் மோதி இந்த விபத்து நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 20 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் அலட்சியப் போக்குக்கு ஒரு முடிவு என்பதே இல்லையா என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில் விபத்து உட்பட சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ரெயில் விபத்துகளுக்கு மத்திய பாஜக அரசைக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
விபத்துகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுதான் ஆட்சியா?. ரெயில் விபத்துகள் நடப்பது என்பது வழக்கமாகி விட்டது. வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. நான் சீரியாகக் கேட்கிறேன்?, இது உண்மையில் ஆட்சிதானா?, இன்னும் எத்தனை காலம் இதையெல்லாம் பொறுத்துக்கொள்வது என்று கேள்விக் கணைகளை விளாசியுள்ளார்.
- கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார்.
- சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகத்தை நாம் பார்த்திருப்போம்.
மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.
கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார். அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் பெண்ணை நம்பாதே என்று பொருள் கொள்ளும் இந்த வாசகத்தை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.
காரில் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கரை யதார்த்தமாக பார்த்த போலீஸார் கார் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் பக்குவமாக பேசி ஸ்டிக்கரை அகற்ற வைத்துள்ளனர்.
பொதுவெளியில் இதுபோன்ற வாசகத்தை வெளிப்படையாக பதிவிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என எக்ஸ் பக்கத்தில் கொல்கத்தா போலீசார் பதிவிட்டுள்ளனர். கொல்கத்தா போலீசின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நம் ஊர்களில் ஆட்டோக்களுக்கு பின்பு சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். கொல்கத்தா போலீசாரை போல தமிழ்நாடு போலீசாரும் பெண்களை அவமதிக்கும் இத்தகைய ஸ்டிக்கரை பார்த்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
- ' ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். இதனையடுத்து, 'ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை விமர்சித்தனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதி கிருஷ்ண ராவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் நேற்று அந்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துச் சுதந்திரத்தை மதித்து சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை விமர்சிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விமர்சிக்கக்கூடாது என்ற முந்தைய தீர்ப்பு செயலிழந்துள்ளது.
- பிரதமர் மோடி தலைமையில் முதல் மந்திரிகள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
- டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா:
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வரும் 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் வங்காளத்தையும் அதன் அண்டை மாநிலங்களையும் பிரிக்கும் சதி குறித்து விளக்குவேன்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அரசியல் சார்புக்கு எதிரான எனது கண்டனத்தை கூட்டத்தில் பதிவுசெய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வேன். அப்படி இல்லையெனில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
- மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்ல இருந்த நிலையில் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
- நாளை புறப்படுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வருகிற 27-ந்தேதி டெல்லி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களில் பலர் புறக்கணித்துள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் இன்று டெல்லி செல்வதாக இருந்தார். கடைசி நேரத்தில் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
"இன்று மதியம் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட இருந்தார். ஆனால் இன்று டெல்லி புறப்படமாட்டார். எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை" என திரணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை டெல்லி புறப்படுவாரா? என்ற கேள்விக்கு, "தற்போது வரை அதுகுறித்து ஏதும் தெரியாது. இது குறித்து நாளைக்குதான் தெரியவரும்" எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. மம்தாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தால் ஏறக்குறைய இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் (மாநிலங்களில் ஆட்சி) புறக்கணித்ததாகும்.
- நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
- நீட் முறைகேடுகளை முன்வைத்து பாராளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின.
கொல்கத்தா:
நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சில ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையானது.
இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து பாராளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தீர்மானங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு முன் மேற்கு வங்காள மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை. நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக்கூடாது என அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாக தெரிவித்தார்.






