'மக்கள் விரோத வரி'.. நிதின் கட்கரியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி.. சர்ச்சையில் காப்பீடு GST

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதுநெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த வரி விதிப்பை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்
'மக்கள் விரோத வரி'..  நிதின் கட்கரியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி.. சர்ச்சையில் காப்பீடு GST
Published on

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வாரியானது மக்கள் விரோத வரி என்று மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது முற்றிலும் மக்கள் விரோதமானது, உயிர்க் காப்பீடு திட்டங்களின் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வாரியானது சாமானிய மக்களுக்கு சுமையாக அமையும். மேலும் இது அவர்களிடையே அச்சத்தை விளைவிக்கும்.

இது புதிதாக யாரும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டடத்தில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தும். அவர்களின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை இந்த வரி விதிப்பானது தகர்க்கும். எனவே என்ன விலை கொடுத்தும் இந்த வரியை உடனே ரத்து செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே இந்த வரி விதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது பேசுபொருளானதையும் பார்க்க வேண்டி உள்ளது.  இதற்கிடையில் நேற்று  மக்களவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இருந்து  காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிரித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com