என் மலர்
மேற்கு வங்காளம்
- வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
- ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இலிவான அரசியலில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் நிற்பதற்குப் பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுகின்றன. வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
நாங்கள் என்ன செய்யவில்லை? நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை?. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல் ஆணையரிடம் பேசினேன். பெண்ணின் பெற்றோரிடம் பேசினேன். குற்றவாளி தூக்கிலிடப்படுவார் என பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இரவு முழுவதும் வழக்கை கண்காணித்து வருகிறேன். தகனம் செய்யும் வரை போலீசாருடன் தொடர்பில் இருந்தேன். போலீசார் 12 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்தனர்.
டிஎன்ஏ சோதனை, சிசிடிவி காட்சிகள், மாதிரி சோதனை என முழுமையான விசாரணை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
எந்தவொரு விசாரணைக்கும், நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ஞாயிறு வரை கெடு விதித்திருந்தேன். முறையான விசாரணை இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. மூத்த மற்றும் இளைய மருத்துவர்களை நான் மதிக்கிறேன். முறையான விசாரணை இல்லாமல் மக்களை கைது செய்ய முடியாது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் முழுமையாகப் பின்பற்றுவோம், சிபிஐக்கு நாங்கள் ஒத்துழைப்போம்.
34 பேர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் பலர் பட்டியலில் இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிபிஐ நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 16-ந்தேதி பேரணி நடத்த இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது,
- மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது- ராகுல் காந்தி.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு எதிர்ப்பு நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் குணால் கோஷ் பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்த குணால் கோஷ் "இதுபோன்று கருத்து தெரிவிக்கும்போது, ராகுல் காந்தி அதற்கு முன் சரியானதுதானா என சரிபார்க்க வேண்டும். ராஜிவ் காந்தி (முன்னாள் பிரதமர்) மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மோசமான சாதனையை அவர் மறந்துவிடக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்குவங்க அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
- பெண் டாக்டர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க இருக்கிறது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் அரங்கேறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட அறைகளை இடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அதுவும் குற்றச் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது, தடயங்களை அழிப்பதற்கான முயற்சி என பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து பாஜக ஐடி செல் பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜியின் அக்கறையின்மை, கொல்கத்தா காவல்துறையின் மூடிமறைக்கும் முயற்சியால் மேற்கு வங்காளம் கோபத்தால் கொந்தளிக்கிறது."
"இந்த வேளையில், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மார்பு மருத்துவப் பிரிவில் உள்ள அறைச் சுவர்களை உடைத்துள்ளனர். அங்கு தான் பணியில் இருந்த ஜூனியர் மருத்துவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் சிபிஐ விசாரணைக் குழுவை கொலையாளிகளிடம் கொண்டு செல்லக்கூடிய முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது."
"ரெசிடென்ட் டாக்டர் ஏரியா எனக் குறிக்கப்பட்ட பகுதி மற்றும் மார்பு மருத்துவத் துறையின் உள்ளே கழிப்பறை (பெண்) ஆகியவையும் சீரமைப்பு என்ற பெயரில் உடைக்கப்படுகின்றன. இது, மம்தா பானர்ஜி எல்லாவற்றிலும் ஆதாரங்களை அழித்து, கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் குற்றச் சுவடுகளை மறைப்பதில் ஈடுபட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை," என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
- கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மேற்குவங்காள வழக்கறிஞர்கள் கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது எனக்கூறியதுடன், நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.
- சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
- மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.
சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று மேற்குவங்க பாஜகவினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், "பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை விவகாரத்தை அடுத்து, அக்கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.
4வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்,"இறந்துபோன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
- பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது
- சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.
சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று மேற்குவங்க பாஜகவினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
- சஞ்சய் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.


மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.
சம்பவத்தன்று அதிகாலையில் அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.
பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
- தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார்.
- வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கொல்கத்தா:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.
இந்நிலையில், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் அவள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, அவள் சரியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
எனவே நீங்கள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்போது, அது தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம்.
தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்திற்காவது அவர் தகுதியானவர் என தெரிவித்தார்.
- ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இளம் பயிற்சி பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தே கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8-ந்தேதி அன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் அவர் மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதும் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
பெண் டாக்டரை கற்பழித்துக் கொன்ற நபர் சைக்கோ போல செயல் பட்டிருப்பதும் டாக்டர்களின் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.
பெண் டாக்டரின் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் ராய் என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பெண் டாக்டரை கற்பழித்து கொன்றதாக சஞ்சய் ராய் மீது குற்றம் சாட்டப்பட்டு கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய செல் போனை ஆய்வு செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இணைய தளங்களிலும் சஞ்சய் ராய் ஆபாச வீடியோக்கள் அடிக்கடி தேடிப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி ஆபாச படங்களை அடிக்கடி பார்த்து, பார்த்தே சஞ்சய் ராய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அளவுக்கு கொடூரமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் சக டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக நுழைந்தது எப்படி? என்பது பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.
சஞ்சய் ராய் ஆஸ்பத்திரி வளாகத்தில் 'சிவிக் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக சென்று வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அன்று அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.
சஞ்சய் ராய் புளூடூத் ஒன்றை பயன்படுத்தி பேசி வந்துள்ளார். ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது அவரது காதில் புளூடூத் இருந்துள்ளது. பெண் டாக்டரை கொலை செய்துவிட்டு தப்பி வெளியேறும்போது புளூடூத் இல்லை. இதுபற்றி சஞ்சய்ராயிடம் போலீசார் கேட்டபோது அவசரம் அவசரமாக வெளியேறியதில் புளூடூத் பயன்படுத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவு கோர்ட்டில் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறும்போது, பெண் டாக்டர் கொலை சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பணியில் உடனிருந்த டாக்டர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவோம் என்று தெரிவித்துள்ளார்..
- பயிற்சி டாக்டர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம்.
மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கார் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்த மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு நீதி கேட்டு மாணவர்கள் பேராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவரது பெற்றோர் சிபிஐ விசாரணை கோரினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிற்சி டாக்டர் கொலையில் மறைக்க ஏதும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இந்த வழக்கில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இந்த விசயத்தில் கைது செய்யப்பட்ட நபர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நாங்கள் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கேட்போம். ஆனால் போராடும் மாணவர்கள் வேறு அமைப்புகளின் விசாரணை வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் அதற்கு எதிராக இருக்கமாட்டோம். சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
இதுபோன்ற சம்பவத்தை தடுப்பதில் மருத்துவ நிர்வாகம் குறைபாடாக இருந்ததாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். சிசிடிவி கேமரா இருக்கும்போது இந்த சம்பவம் மருத்துவமனைக்குள்ளே எப்படி நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநில அரசால் நடத்தப்படும் இந்த கல்லூரியில் முதுநிலை 2-வது வருட மருத்துவ மாணவி கடந்த வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு உணவு சாப்பிட்ட பிறகு, செமினார் ஹாலுக்கு சென்றுள்ளார். 3-வது மாடியில் உள்ள செமினால் ஹாலில் அடுத்த நாள் காலை பிணமாக கிடந்தது தெரியவந்தது. 31 வயதான அந்த பயிற்சி டாக்டர் மருத்துவ பரிசோதனையில் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மாணவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 3 மட்டுமே சுமார் 232 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிறுபான்மையினரான இந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- சகர்திகி [Sagardighi] ஆற்றில் இறங்கி இரு நாடுகளை பிறகும் எல்லை வேலிக்கு 400 மீட்டர் தொலைவில் அவர்கள் தயாராக நின்றுள்ளனர்
வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில், ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசை உருவாகியுள்ளது.
சிறைகள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியில் வந்த நிலையில், இன்னும் அங்கு கலவரங்கள் ஓய்ந்தபாடில்லை. கடந்த 3 மட்டுமே சுமார் 232 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிறுபான்மையினரான இந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், வங்காள தேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல் நடக்கும் வாய்ப்புள்ளதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை [BSF] தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்ச பேகர் [Cooch Behar] மாவட்டத்தை ஒட்டிய வங்காள தேச எல்லை வழியாக நேற்று ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றுள்ளனர்.

நேற்று காலை 9 மணியளவில் எல்லையில் உள்ள சகர்திகி [Sagardighi] ஆற்றில் இறங்கி இரு நாடுகளை பிறகும் எல்லை வேலிக்கு 400 மீட்டர் தொலைவில் அவர்கள் தயாராக நின்றுள்ளனர். ஆனால் இதையறிந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களைப் பாதுகாப்பாக வங்காள தேசத்துக்குள்ளேயே திருப்பி அழைத்து செல்லும்படி வங்காள தேச எல்லைப் படையினரிடம்(BGB) தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் இறங்கி இந்தியாவுக்குள் நுழையத் தயாராக நிற்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திய - வங்காளதேச எல்லையில் நடக்கும் ஊடுருவலை தடுக்கும் பணிகளை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேற்குவங்கத்தின் முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா 11 ஆண்டுகள் இருந்தார்
- மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.
80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பிறகு அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 2000 ஆம் ஆண்டு மேற்குவங்க துணை முதல்வராக பதவியேற்றார்.
முதலமைச்சராக இருந்த அவர், 2001 மற்றும் 2006ல் சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற காரணமாக இருந்தார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா மரணத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தபோது சில முறை அவரைச் சந்தித்தேன்.
இந்த துயரமான நேரத்தில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
சிபிஐ(எம்) கட்சி உறுப்பினர்களுக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது இறுதிப் பயணம் மற்றும் சடங்குகளின் போது அவருக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.






