என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மாணவர்கள் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • அரசு இயந்திரம் செயல்படவில்லை எனக் கூறி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

    மேற்குவங்கம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. டாக்டர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வற்புறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி உதயன் குஹா பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

    அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பேசிய வீடியோதானா? என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியவில்லை.

    அந்த வீடியோவில் "மம்தாவை நோக்கி விரல்களை காட்டி குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது ஒருபோதும் வெற்றியடையாது. மம்தா நோக்கி யார் விரல் நீட்டுகிறார்களோ? அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும்" என பேசியுள்ளார்.

    டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி ஒரு கும்பல் திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அசாதாரண நிலை ஏற்பட்ட போதிலும் போலீசார் தடியடி நடத்திவில்லை.

    "வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் வன்முறை நடைபெற்றது. இன்னொரு வங்கதேசம் போன்று திரும்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த போராட்டத்தை சாக்குபோக்காக வைத்து வீட்டிற்கு செல்ல அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிட பயன்படுத்தி அதனால் ஒரு நோயாளி இறந்தால், ஸ்டிரைக் காரணமாக மக்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அப்போது நாங்கள் உதவமாட்டோம் என அவர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

    • கூர்மையான ஆயுதம் தாக்கியதில், ஒரு பெண் யானை பலத்த காயமடைந்தது.
    • நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

    இதனால், பீதியடைந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முயன்றனர். அப்போது, யானைகள் கோபமடைந்து அங்குள்ள சுற்றுசுவர்களை இடித்து சேதப்படுத்தின.

    மேலும், யானைகள் தாக்கியதில் அந்த ஊரில் இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, யானைக் கூட்டத்தை விரட்ட ஹுல்லா அணியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீப்பந்தங்களை யானைகள் மீது எறிந்து விரட்டியடித்தனர்.

    இதில், கூர்மையான ஆயுதம் தாக்கியதில், ஒரு பெண் யானை பலத்த காயமடைந்தது. இதனால் அந்த யானை சரியாக நடக்க முடியாமல் தவித்தது.

    கூர்மையான தீப்பந்தம் பெண் யானையின் முதுகெலும்பில் சிக்கி பாதிப்படைய செய்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் இல்லாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

    கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு 11-வது நாளாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில்,கிர்த்தி சர்மா என்ற இளைஞர் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில், இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

    • பெண் டாக்டர் உடலில் 14 இடங்களில் காயம்.
    • கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சி.பி.ஐ. குழுவை சேர்ந்த 5 டாக்டர்கள், சஞ்சய் ராயின் மனநிலையை பரிசோதித்தனர்.

    பெண் டாக்டர் கொலைக்கு பிறகு 2 பேரி டம் சஞ்சய் ராய் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இது தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    ஆர்.ஜி.கார் மருத்துவமனை யின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், கொலையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களில் சிலர் மீது கொலையுண்ட பெண் டாக்டரின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சந்தேகத்துக்குரிய அவர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட டாக்டர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    கொலை நடைபெற்ற மருத்துவமனையின் கருத்த ரங்க கூடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் எத்தனை பேர் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதை கண்டறிய முடியும்.

    பெண் டாக்டர் வேறு இடத்தில் கொலை செய்யப் பட்டு, கருத்தரங்க கூடத்தில் உடல் வைக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

    ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு, 4 ஆண் டாக்டர்களோடு எனது மகளுக்கு பணி வழங்கப்பட்டது.

    கருத்தரங்கு கூடத்தில் கொலை நடைபெற்றதாக போலீசார் கூறுகின்றனர். இதை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின் வேறு பகுதியில் எனது மகளை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் கருத்தரங்கு கூடத்தில் உடலை வைத்துள்ளனர். கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

     கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு இன்று (திங்கட் கிழமை) 11-வது நாளாக மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அது போல நாடு முழு வதும் பல மாநிலங்களில் இன்று போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டது.

    இதனால் அவசர சிகிச்சை பணிகளில் மட்டுமே டாக்டர்கள் ஈடுபடு கின்றனர். இதர மருத்துவ பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    இதன்காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்க ளில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற் பட்ட அறுவைச் சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோ தனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண் டாக்டர் உடலில் 14 இடங்க ளில் கடுமையான ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது உறுப்பில் வெள்ளை நிற அடர்த்தியான திரவம் வீசப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றத்தை மறைக்க சிலர் திட்டமிட்டு அப்படி செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக் கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெண் டாக்டரின் உடலில் 14 இடங்களில் கொடூர காயங்கள் இருப்ப தால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக பலரால் சித்ரவதை செய்யப் பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையின் இந்த புதிய தகவல் கொல்கத்தா டாக்டர்கள் மத்தியில் மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று அவர்கள் இரவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டம் நடைபெற்றது.

    அதுபோல கொல்கத்தா வில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் முற்றுகை யிட்டு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இதனால் கொல்கத்தாவில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    டாக்டர்கள் மற்றும் பொது மக்களின் போராட் டத்தை ஒடுக்க மேற்கு வங்காள அரசு சில அறி விப்புகளை வெளியிட்டு உள்ளது. இன்று முதல் கொல்கத்தாவில் பேரணி நடத்தவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று மேற்கு வங்கா ளத்தில் பாரதிய ஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரசாரும் பதில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு வங்கா ளத்தில் பல இடங்களில் இன்று பாரதீய ஜனதாவும், திரிணாமுல் காங்கிரசும் நேருக்கு நேர் தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் இன்று அவசர கூட்டம் நடத்தினார். அதில் அவர் பெண் டாக்டர் கொலை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் கொல் கத்தாவில் இன்று ஆயி ரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று பெண் அமைப்புகள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

    பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார்.
    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாக தெரிவித்தார்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் தங்கள் மகளின் கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கை போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை பற்றி கூற மறுத்து விட்டார்]

    தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படி ஒரு நிலைமை வேறு எந்த தாய்க்கும் வர கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். 

    • இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட அம்சங்கள் அதில் உள்ளன

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேலைக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

    மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின்மூலம் அரசுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நைட் சஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி,

    நகர்களில் முழு சிசிடிவி கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது,

    ஆபத்து சமயங்களில் போலீசை உடனே தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனையை கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது,

    பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீஸ் ரோந்தை அதிகரிப்பது,

    தெளிவாக தெரியும் வகையில் அடையாள அட்டைகளை மருத்துவமனை மற்றும் கல்லூரியை சேர்நதவர்கள் அணிவதை கட்டாயமாக்குவது,

    இங்குள்ள செக்யூரிட்டிகளை போலீஸ் மேற்பார்வையில் கொண்டுவருவது,

    பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

    • பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.
    • குற்றவாளிக்கு சிபிஐ தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமான வகையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நீதி வேண்டி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

    சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று பேரணியில் ஈடுபட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுடன் மம்தா பானர்ஜி பேரணி மேற்கொண்டார். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் "நாங்கள் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விரும்புகிறோம்" என கோஷம் எழுப்பினர்.

    "பொதுமக்களின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறோம். அவர்கள் சரியான விசயத்தை செய்தார்கள்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
    • பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது.

    மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் திடீரென வன்முறையில் இறங்கி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

    இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பான வாசகம் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது என குற்றம்சாட்டினர்.

    பாஜக-வினர் கொல்கத்தாவின் ஷியாம்பஜார் ஐந்து முனை சாலையில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அதை முறியடித்தனர். பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது. இந்த செயல் பொதுமக்களின் எதிர்ப்பை முடக்கும் முயற்சி என பாஜக தெரிவித்தது. பல இடங்களில் பாஜக-வினர் கைது செய்யப்பட்டனர்.

    எம்எல்ஏ அக்னிமித்ரா பால், ருத்ரானில் கோஷ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த போராட்ட பேரணியில் கலந்த கொள்ள அங்கு திரண்டனர்.

    "இந்த எதேச்சதிகார அரசு போக வேண்டும். அம்மாநில மக்கள் மம்தா பானர்ஜி அரசை அகற்றுவார்கள்" என அக்னிமித்ரா பால் தெரிவித்தார். பாஜக மாநில தலைவரான சுகந்தா மஜும்தார் அந்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தீப பேரணியும் நடத்த உள்ளனர்.

    • உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    • பாஜகவும் இன்று பேரணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கால்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

    நாடு முழுவதும் பலவேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கல்கத்தாவில் இன்று மாலை மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    முன்னதாக மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் மடை மாற்ற முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் மூலம் இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக பேரணி அறிவித்துள்ள நிலையில், மம்தாவும் மாலையில் பேரணி நடத்த உள்ளார். கல்கத்தாவின் மவ்லாலி தொடங்கி தர்மஸ்தலா வழியாக இந்த பேரணியை நடத்த உள்ளார் மம்தா.

    வழக்கு இப்போது சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில் நியாமான விரைவான நீதியை வலியுறுத்தி மம்தா இந்த பேரணியில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பெண் மருத்துவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.
    • பெண் மருத்துவர் படுகொலையை எதிர்த்து போராட்டம் தீவிரம்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையை துவங்கினர். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

    மேலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை இந்த வழக்கின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

     


    இதன்படி, ஆகஸ்டு 17 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18 ஆம் தேதி காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மருத்துவர்களின் நியாயமான காரணங்களுக்கு நாட்டின் இரக்கம் எங்களுக்கு தேவை. மருத்துவர்கள் போராட்டத்திற்கு வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    • மருத்துவமையில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது.
    • ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையை சூறையாடினர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் பிரச்சினையைத் தூண்டி விடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சுமார் 40 பேர் கொண்ட குழு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து, அவசர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் அறை மற்றும் மருந்துக் கடையை சேதப்படுத்தியது.

    மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையையும் சூறையாடினர்.

    இதைக் கண்டித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் அரசியல் தலையீடு இருக்கிறது.

    மாணவர்களோ மருத்துவர்களோ தங்கள் போராட்டங்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. அதற்கு பதிலாக சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சிக்கின்றனர்.

    காவல்துறையினர் இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் மீதும், போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீதும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சி செய்கின்றன. வீடியோவை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராய் போலீசாரிடம் சிக்கினார்.

    இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நேற்று நள்ளிரவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை வார்டுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்கள் உட்பட வார்டு முழுவதையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள்ளும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

    அப்போது கும்பல் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்து எரித்தது. 2 போலீஸ் வாகனங்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் முடியாமல் போனதால் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சூறையாடியது என்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பான பாதை வழங்கி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போலீஸ் கமிஷனரை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

    ×