என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி கார் மீது தாங்குதல் நடத்திய மர்ம நபர்

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வைத்து பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை தெற்கு கொல்கத்தாவில் சதர்ன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த பாயல் முகர்ஜியின் கார் அவ்வழியாக வந்த பைக் ஒன்றின் மீது லேசாக இடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பைக் ஓட்டுநர் பாயல் அமர்ந்திருந்த காரை கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதை காருக்குள் இருந்த பாயல் உடனே பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கினார்.

    வெளியே வரும்படி பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். காருக்குள் அமர்ந்திருத்த பாயல் யாராவது உதவிக்கு வரும்படி கூச்சலிட்டபடி இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    தன்னைத் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக அந்த நபர் மீது பாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். பாயல் கண்மூடித்தனமாக காரை ஓடிவந்து தனது பைக் மீது இடித்ததாக அந்த நபரும் பாயல் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கால்நடை தடுப்பு வேலி அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • ஆட்சேபனை தெரிவித்ததால் வீரர்கள் வேலி அமைக்கும் பணியை கைவிட்டுள்ளனர்.

    இந்தியா- வங்கதேச நாடுகளின் எல்லை மேற்கு வங்க மாநிலத்தில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லையில் இருநாட்டு பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையைிலான அரசு கவழிந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இந்தியா- வங்கதேசம் எல்லை அமைந்துள்ளது கூச்பெஹாரில் கால்நடை தடுப்பு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு காவலர்கள் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் வீரர்கள் வேலை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதன்காரணமாக கூச்பெஹார் எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை நிலவுகிறது. இந்தியா எல்லையில் வேலி அமைக்கவில்லை. இந்திய எல்லைக்குள்தான் வேலை அமைக்கிறது. அதுவும் இரு நாட்டு ஒப்பந்தத்தின்படிதான் இந்த வேலை அமைக்கப்படுகிறது.

    இருந்தபோதிலும் வங்கதேச எல்லை காவலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் இருதரப்பு வீரர்கள் இடையே மோதல் ஏதும் ஏற்படவில்லை.

    அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு டைரக்டர் ஜெனரல்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா-வங்கதேசம் எல்லை 4096 கி.மீ. நீளம் கொண்டது. எல்லை தொடர்பாக இந்தியா-வங்கதேசம் இடையில் வருடத்திற்கு இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த மார்ச் 5-ந்தேதி வங்கதேசத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதுபோன்ற சம்பவம் இந்த வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்றுள்ளதாக பாதுகாப்புப்படை வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் அல்லது ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு வர முயற்சிக்கிறார்கள். இதனால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் எதிர்பாராத வகையில் வங்கதேசத்தின் கடல்பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களை விடுவிக்க வங்கதேச எல்லை காவலர்கள் மறுத்துவிட்டனர்.

    • பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
    • பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன."

    "இது தொடர்பாக கிடைத்த தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்ற தகவல் அச்சமடைய செய்கிறது. இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."

    "பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    "இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை.
    • சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய்.

    இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது.
    • சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சஞ்சய் ராயை சிபிஐ பல கட்டங்களாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது. டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில்[CFSL] இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய் ராயை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.

    சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான். சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலமும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமும் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது.

     

    முன்னதாக சம்பவ நடந்த அன்றைய இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியில் இரண்டு இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் தனது நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினான். பின்னர் தூங்கலாம் என்று தான் ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வாக்குமூலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. 

    • குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
    • மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

    குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக  புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.

    பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.
    • இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக 31 வயதான சஞ்சய்ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

    இவன் போலீசாரிடம் தன்னார்வ தொண்டனாக பணிபுரிந்து வந்தவன். அதை பயன்படுத்தி தான் அவன் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.

    இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான். அதில் அவன் கூறி இருப்பதாவது:-

    கடந்த 8-ந்தேதி இரவு நானும், எனது நண்பனும் வடக்கு கொல்கத்தாவில் விபசாரம் நடக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கு நாங்கள் நள்ளிரவு வரை உல்லாசமாக இருந்தோம்.

    பிறகு நள்ளிரவு 2 மணிக்கு மற்றொரு சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கும் நீண்ட நேரம் பெண்களுடன் இருந்தோம். அதன் பிறகு தனது நண்பன் மோட்டார் சைக்கிளில் அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

    அதிகாலை 3.50 மணிக்கு நான் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். வளாகத்தில் அமர்ந்து மது அருந்தினேன். 4 மணி அளவில் கருத்தரங்கு நடக்கும் கூடத்துக்கு தூங்கலாம் என்று சென்றேன்.

    அப்போது அங்கு பயிற்சி பெண் டாக்டர் தூங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் மீது பாய்ந்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டேன். அவர் அலறினார். இதனால் அவரது கழுத்தை நெரித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

    மேலும் அவன் கூறுகையில், "மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் சிக்கி விட்டேன். என்னிடம் விசாரிப்பது போல கல்லூரி முதல்வரையும் விசாரிக்க வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்," என்றான்.

    • கொடூரமான சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
    • நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது மேற்கு வங்காள அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏன்? தந்தையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டது. மேலும், மாற்றத்திற்காக நாடு இன்னுமொரு கற்பழிப்பிற்காக காத்திருக்க முடியாது என காட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரிடம் போன் மூலம் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசியதை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    ஆளுநர் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோரிடம் "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும். இன்று (நேற்று) நான் டெல்லியில் இருக்கிறேன். இந்த விசயம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். உங்களுக்கு வசதியான நேரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

    "தேசம், ஒட்டுமொத்த தேசமும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிகுந்த நிம்மதியுடன் கேட்கிறது. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. இதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது கேட்கிறார்களா? மம்தா பானர்ஜி தயது செய்து கையை உயர்த்துவாரா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் வீடியோ காலில் பேசியதை வெளியிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் "இன்றைய உங்கள் வீடியோ நீங்கள் வகிக்கும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கிறது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு உங்களால் பதிவு செய்யப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது நெறிமுறையற்றது. தயவு செய்து உங்களது உயர் பதவியை சுய விளம்பரத்திற்காக ஒரு பயங்கரமான சோகத்தை பயன்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் மீது ஜூன் மாதம் புகார்.
    • பொலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சந்தீப் கோஷ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சிபிஐ இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. சுமார் 53 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021-ல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்.

    பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பெற்றோர்களிடம் தாமதமாக தெரிவித்தது. கொலை நடைபெற்ற இடத்தில் புதுப்பித்தல் வேலை தொடர்பாக அவர் எடுத்த முடிவு ஆகியவை குறித்து சிபிஐ கேள்விகள் கேட்டது.

    சந்தீப் கோஷை சுற்றி சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது.

    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறார்.
    • மம்தா பானர்ஜி சாட்சிகளை வாங்க முயற்சிக்கிறார்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வந்த பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மம்தா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் இயந்திரம் சரியாக செயல்படவில்லை. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என மம்தா வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார் என மம்மா பானர்ஜி மீது கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்தின் வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டச்சார்யா கூறியதாவது:-

    மேற்கு வங்காள முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதன்பின் எல்லாம் முடிந்தது எனச் சொல்கிறார்கள். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார். இது துரதிருஷ்டவசமானது. சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் நேற்று முன்தினம் (ஞாயிறு) "முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. தற்போது இந்த நம்பிக்கை போய்விட்டது. உடலை பார்த்தால் யாரும் இது கொலை வழக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், மருத்துவத்துறையில இருந்து, எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாக மம்தா பானர்ஜி எங்களிடம் தெரிவித்தார். எங்களது மகள் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. மூன்று உடல்கள் இருந்தன. அதில் எங்களது மகள் உடன் முதலாவதாக தகனம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • அரசு இயந்திரம் செயல்படவில்லை எனக் கூறி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

    மேற்குவங்கம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. டாக்டர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வற்புறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி உதயன் குஹா பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

    அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பேசிய வீடியோதானா? என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியவில்லை.

    அந்த வீடியோவில் "மம்தாவை நோக்கி விரல்களை காட்டி குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது ஒருபோதும் வெற்றியடையாது. மம்தா நோக்கி யார் விரல் நீட்டுகிறார்களோ? அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும்" என பேசியுள்ளார்.

    டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி ஒரு கும்பல் திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அசாதாரண நிலை ஏற்பட்ட போதிலும் போலீசார் தடியடி நடத்திவில்லை.

    "வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் வன்முறை நடைபெற்றது. இன்னொரு வங்கதேசம் போன்று திரும்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த போராட்டத்தை சாக்குபோக்காக வைத்து வீட்டிற்கு செல்ல அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிட பயன்படுத்தி அதனால் ஒரு நோயாளி இறந்தால், ஸ்டிரைக் காரணமாக மக்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அப்போது நாங்கள் உதவமாட்டோம் என அவர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

    ×