search icon
என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
    • வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

    அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.

    அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    • அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
    • பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
    • மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் ஸ்கூட்டி ஓட்டி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள பிலிபித் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

    இதற்கிடையே அந்த நர்ஸ் தனது ஸ்கூட்டியில் மருத்துவமனையை சுற்றி ஓட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நர்சின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    • ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார்.
    • உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, பா.ஜனதா கடவுளின் பெயரில் வாக்கு கேட்பதாக குற்றம் சாட்டினார்.

    அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவை ஆதரித்து பல தெருமுனை கூட்டங்களில் (நுக்கட் சபா- nukkad sabhas) பேசிய பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை தனது அரசாங்கம் 10 ஆண்டுகளில் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் கூறுகிறார். கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

    ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார். உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள். ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை பேசாமல், உங்கள் வீடுகளுக்கு வந்து, கடவுளின் பெயரால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இதை அவர்கள் செய்யவில்லையா?. அவர்கள் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் 10 வருடங்களில் செய்த வேலையின் பெயரில் ஏன் வாக்குகள் கேட்கவில்லை?.

    நாங்களும் மதங்களை கொண்டுள்ளோம். நாம் அனைவருக்கும் கடவுள் மற்றும் மதம் மிகவும் பிரியமானது. ஆனால் அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துவது தவறு.

    இங்குள்ள அரசியலின் பாரம்பரியம் என்பது மக்களுக்கு சேவை செய்வதே. அதை தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர். அந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. எனவே நீங்கள் எப்போதும் எங்களை ஆதரித்து எங்களை பலப்படுத்துகிறீர்கள். ஒருவரையொருவர் பலப்படுத்தும் வகையில் உறவு இருந்தது.

    ஆனால்... என் சகோதரர் தோற்கடிக்கப்பட்டார், அவர்கள் எங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிலரை தவறாக வழி நடத்துவதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளில், அவர்களின் புதிய வகையான அரசியலை நீங்கள் பார்த்தீர்கள், அதாவது இந்த பகுதியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.

    நான் எங்கு சென்றாலும் மக்களுக்கு வேலை கிடைத்ததா? அல்லது விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா? என்று மக்களிடம் கேட்கிறேன். எந்த வேலையும் களத்தில் காணப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 10 ஆண்டுகளில் மோடி ஜி செய்துள்ளதை பார்க்கலாம்.

    நீங்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றால், யாருடைய வாழ்க்கை மேம்பட்டது? 10 ஆண்டுகளில், பெரிய முதலாளிகளின் நிலை மேம்பட்டது மற்றும் அவர்களின் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, ஆனால் விவசாயிகளுக்கு அல்ல.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    • மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
    • எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.

    இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.

    ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.

    உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

    தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

    தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

    அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார்.
    • அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தமுறை சோனியா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதில் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, விசுவாசமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

    காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என்ற முடிவின் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என பா.ஜனதாவின் கிண்டல் செய்தனர். மேலும் பயந்து ஓடிவிட்டார் என விமர்சனம் செய்திருந்தது.

    இந்த நிலையில், பா.ஜனதாவின் ஆணவம் அடித்து நொறுக்கப்படும். அமேதி தொகுதியில் என்னுடைய வெற்றி, காந்தி குடும்பத்தின் வெற்றியாக இருக்கும் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    பிடிஐ நிறுவத்திற்கு பேட்டியளித்த அவர் அமேதி தொகுதி குறித்து கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார். அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    சதீஷ் சர்மா 1991 மற்றும் 1996-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ல் தோல்வியடைந்த நிலையில், ராகுல் காந்திக்காக ரேபரேலி தொகுதிக்கு மாறினார். சோனியா காந்தி 1999-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சரண் அடைந்து விட்டதாக பா.ஜனதா கூறுவது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. அதற்கு மே 20-ந்தேதி மக்கள் பதில் அளிப்பார்கள். முடிவு ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

    ஆங்கிலேயர்களின் காலத்தில் காந்தி குடும்பத்தினர் ஓடிப்போனதில்லை, இப்போதும் ஓடிப்போனதில்லை, எதிர்காலத்திலும் அப்படி ஓடிப்போக மாட்டார்கள். மற்றவர்களை ஓட வைப்போம். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக ஓடுவதை உறுதி செய்து வருகிறார்.

    இவ்வாறு கிஷோரி லால் சர்மா தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க, உடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
    • எங்கள் கட்சியில் சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    அமேதி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜனதாவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?

    இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

    ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகல்காந்தி வெற்றி பெற்றார். ராகுல்காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சில வாகன ஓட்டிகள் சாலையில் வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் இளைஞர்கள் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்து சென்ற காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் பரவி இருந்தது.

    இந்நிலையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கான்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அணிந்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.

    அதில், சாலையில் செல்லும் அந்த இளம்பெண் அணிந்திருந்த ஹெல்மெட்டை கூர்ந்து கவனிக்கும் போது அந்த ஹெல்மெட் அவரது தலையை முழுங்குவது போன்று இருக்கிறது. தலை முழுவதும் மூடிய நிலையில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் காணப்படும் அந்த பெண்ணின் வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
    • நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நொய்டாவில் உள்ள செக்டார் 107ல் உள்ள லோட்டஸ்-300 சொசைட்டியில் சிறுமியை நாய் கடித்துள்ளது. மே 3-ந்தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.

    சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.

    சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×