என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மரூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அந்தோணி என்பவரது கரும்பு தோட்டத்தில் 3 யானைகள் புகுந்தது. பட்டப்பகலில் யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்ததால் விவசாய கூலி தொழில் பணிகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் கரும்பு காட்டை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் உலா வந்தது. கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர்.

    ஆனாலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி கரும்பு காட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.

    பொதுமக்களும் வனத்துறையினரும் இணைந்து தோட்டத்தில் பதுங்கி இருக்கும் யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஒருபுறம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஒரு வழியாக இரவு 11 மணி அளவில் அந்த மூன்று யானைகளும் கரும்பு தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக வனத்துறையினரையும், பொதுமக்களையும் அந்த மூன்று காட்டு யானைகளும் அலறவிட்டன.

    எனினும் வனப்பகுதியில் இருந்து எந்நேரமும் மீண்டும் அந்த யானை கூட்டம் தோட்டத்துக்குள் வர வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,0060 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

    06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-07-2025- ஒரு கிராம் ரூ.120

    07-07-2025- ஒரு கிராம் ரூ.120

    06-07-2025- ஒரு கிராம் ரூ.120

    05-07-2025- ஒரு கிராம் ரூ.120

    04-07-2025- ஒரு கிராம் ரூ.120

    • பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
    • கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
    • எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:

    இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடு நாங்கள் கூட்டணி சேர மாட்டோம், அவங்க தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவிட்டு, போன தேர்தலில் அவங்க கூட கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று சொல்லி யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அ.தி.மு.க. அவங்ககூட போய் சேர்ந்துவிட்டது.

    அதனால் தான் அவர்களை வீடு வீடாக போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

    அதேநேரத்தில் இத்தனை தாக்குதல்கள்... ஒன்றிய அரசாங்கம் நம் தமிழ் அடையாளங்கள் மீது நம்முடைய சரித்திரத்தை மாற்றணும், மொழியை மாற்றணும், ஏன் 39 பேர் பாராளுமன்றத்தில் நின்னு தமிழ்நாட்டுக்காக சண்டை போடுறாங்க என்ற காரணத்திற்காக தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பா.ஜ.க. அரசு ஆட்சி நடக்கிறது.

    இன்று 39 பேராக இருப்பது நாளை 20 பேராக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நாம் பேசுவது எடுபடாது. அதனால் அந்தநிலையை நாம் அடைந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றவர் நம் முதலமைச்சர்.

    ஆனால் அதை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்.

    அதை செய்ய வேண்டும் என்றால், நமக்காக போராட வேண்டும் என்றால் உங்களுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது புரிய வேண்டும்.

    ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.

    புதிதாக அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருவேன் என்று நினைத்து எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.

    ஆட்சி மாற்றம் டெல்லியில் வரும்போது செய்து தருகிறோம் என்று சொன்னோம்.

    வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்று தேர்தலில் நிற்பதற்கு, வாக்கு கேட்பதற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
    • பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.

    இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழக ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் முழு அளவில் இன்று பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    • 13 தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
    • பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அம்பத்தூர்: கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவபாதம் தெரு.

    திருமுல்லைவாயல்: அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கண்ணன்கோவில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள் நகர், வி.பி.ஆர்.நகர், சக்திநகர்.

    அடையாறு: பெசன்ட் நகர் 6 முதல் 15வது குறுக்குத் தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்புகள், கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்குத் தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை நீட்டிப்பு.

    சோழிங்கநல்லூர்: ராஜேஷ் நகர், அதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, பெல் நகர் 4வது, 5வது குறுக்குத் தெரு, புஷ்பா நகர்.

    தாம்பரம்: மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், விஜிபி சரவணா நகர், ஸ்ரீதேவி நகர், அரவிந்த் நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகா நகர், காயத்திரி கார்டன், பார்வதி நகர், சிவசக்தி நகர், சரவணா நகர் ஒரு பகுதி, சீனிவாச நகர், சுந்தர் அவென்யூ.

    கோயம்பேடு மார்க்கெட்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.

    • எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
    • நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன்.
    • அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதும் எதிர்த்து பேசுவதே கிடையாது. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள்.

    திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சி விடுதலை சிறுத்தைகள். இந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை எனப் பேசுகிறார். நீங்கள் கண்டு பிடித்தீர்களா? டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். ஏன் நோபல் பரிசு கொடுக்கலாம். எங்களுக்கும், எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என சொல்வதற்கு நீங்கள் யார்?.

    வந்து பாருங்கள் நாங்கள்தான் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்களுக்குள்தான் கருத்து வேறுபாடு வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன். அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க. எப்படியாவது கூட்டணி ஆட்சி வரக் கூடாதா என உள்மனது சொல்கிறது. ஆனால் வெளியில் இல்ல... இல்ல... இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என அவரே சொல்கிறார். இரண்டு கருத்தையும் அவர்தான் குறிப்பிடுகிறார். உங்களுடைய கூட்டணியில்தான் மிகப்பெரிய குழப்பம் காணப்படுகிறது.

    அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டார். எங்களுடைய கூட்டணி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் எனக் குறிப்பிட்டார். ஆகவே எங்களுடைய கூட்டணி தெளிப்படுத்தப்பட்டு விட்டது.

    எதிர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் கூட்டணி அமைத்தால் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?. பாஜக உடன் கூட்டணி என எங்களுக்கு விருப்பம். தற்போது ஐஜேகே கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. பார்வர்டு பிளாக் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்... வரும்... அதிமுக கூட்டணி கண்டு பயம் வந்துள்ளது. அதிமுக கூட்டணியை பற்றி பேசும்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது.

    2026 தேர்தலில் பலமாக கூட்டணி அமைக்கப்பட்டு 234 தொகுதியில் 200 தொகுதிகளில் அதிமுக தலைமையில் கூட்டணி வெல்லும்... வெல்லும்...

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டப்பட்டன. திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தது. 1100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 3ஆவது கூட்டு நீர் திட்டம் அதிமுக-வால் தொடங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளார்.

    கோவை மாநகராட்சியில் திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. திறந்து வைத்தது திமுக. திமுகவால் திட்டத்தை கொண்டு வர முடியாது.

    கூட்டணி பலமாக இருக்கிறது என ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். நீங்கள் கூட்டணியை நம்பி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள்தான் வாக்களித்து ஆட்சியை அமைக்க முடியும். கூட்டணி அல்ல.

    திமுக கூட்டணியில் உள்ள குட்டி கட்சிகள்... கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது.

    முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்கிறீர்களே, எப்படி என்கிறார்கள். தேர்தல் மூலம்தான் மீட்போம். ஏனென்றால் கொடூமையான, கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முடியாத அரசாங்கம். திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதல்வராக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

    ஆகவே, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தமிழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிகொண்டிருக்கிறது. அதில் இருந்து தமிழகத்தை மீட்போம். அதுதான் லட்சியம். ஆகவே முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போன்று எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள்.

    எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.

    திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இப்படியோ போய்க்கொண்டிருந்தால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • விழுப்புரத்தில் வருகிற 20ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் .
    • பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    பாமக கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் நான்தான் கையெழுத்திடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டம் செல்லாது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    8 தீர்மானங்கள் பின்வருமாறு:-

    1. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது

    2. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் ஜூலை 20 ஆம் நாள் போராட்டம்

    3. பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்

    4. அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி சார்பில் போராட்டங்கள்

    5. அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்போம்!

    6. திருப்புவனம் காவல் நிலையக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

    7. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    8. தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது.

    ×