என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு: வருகிற 20ஆம் தேதி திமுக அரசை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம்
- விழுப்புரத்தில் வருகிற 20ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் .
- பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
பாமக கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் நான்தான் கையெழுத்திடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டம் செல்லாது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
8 தீர்மானங்கள் பின்வருமாறு:-
1. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது
2. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் ஜூலை 20 ஆம் நாள் போராட்டம்
3. பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்
4. அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி சார்பில் போராட்டங்கள்
5. அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்போம்!
6. திருப்புவனம் காவல் நிலையக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!
7. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
8. தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது.






