என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் பெரும்பாலான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
- பா.ம.க. கட்சிக்கொடியை ராமதாஸ் ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ம.க. கட்சிக்கொடியை அவர் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். தலைவர் அன்புமணி விழாவை புறக்கணித்தார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று கூறினார்.
- கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (புதன்கிழமை) 21-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனருக்கு பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இருந்து தீபம் ஏந்தியவாறு, மவுன ஊர்வலம் புறப்பட்டு, மகாமக குளத்திற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
- டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- இறந்து கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பாாத்து சென்றனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்பரப்பில் ஏராளமான டால்பின் மீன்கள் உள்ளன. இவை ஆழமான கடற்பரப்பில் மட்டுமல்லாமல் கரையோர பகுதிகளுக்கும் வந்து மீன்களை உண்பது வழக்கம்.
அந்த வகையில், மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரத்தில் அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படும். இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே ராட்சத டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் டால்பின் மீனை கடலோரத்தில் இருந்து கரைக்கு இழுத்து வந்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் கூறுகையில், இந்த டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
- கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் ரெயில்வே கிராசிங்கில் கடந்த 8-ந்தேதி விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பள்ளி வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.
இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரெயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரெயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரெயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரெயில்கள் வரும் நேரங்களில் அவர் ரெயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணை வரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி 44-வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 119.56 அடியாகவும், நீர் இருப்பு 92.77 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
- நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 124 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-07-2025- ஒரு கிராம் ரூ.125
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
- என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
- வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.
நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை.
- தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
- சென்னை சென்டிரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில்.
- சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
சென்னை:
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 22, 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12712), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு (45 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பெருங்குடி : அறிஞர் அண்ணா 2வது-4வது தெரு, சரஸ்வதி நகர் தெற்கு மற்றும் வடக்கு, பாண்டியன் சாலை மெயின் ரோடு, செங்கனியம்மன் கோவில் தெரு, குமரகுரு அவென்யூ 1வது-11வது தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, கக்கன் தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, ரூபி காம்ப்ளக்ஸ், சிவன்கோவல் தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வாசன் கண் மருத்துவமனை, வசந்தபவன் ஹோட்டல்.
சோழிங்கநல்லூர் : ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர்.
நங்கநல்லூர்: பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், உள்ளகரம், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு.
குன்றத்தூர்: குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, பொன்னியம்மன் கோவில் தெரு, சத்தியநாராயணபுரம், விக்னேஷ்வரா நகர் பகுதி, ஆர்.இ.நகர் 6வது மற்றும் 7வது தெரு.
சேலையூர்: அம்பேத்கர் நகர், அகரம் மெயின் ரோடு, ஜெகஜீவன் ராம் நகர், ஏர்மேன் என்கிளேவ், இந்திரா நகரின் ஒரு பகுதி, ஐஏஎஃப் சாலை, லட்சுமி அவென்யூ மற்றும் விரிவு, ராஜ்குமார் அவென்யூ, சக்தி அவென்யூ, சீனிவாச நகர், மாதா நகர், சுந்தரம் ஸ்மார்ட் சிட்டி, கேவிஎன் நகர், ரிக்கி நகர், மஹாதேவன் நகர், மாருதி நகர் அவென்யூ விரிவாக்கம், முல்லை தெரு, அவ்வை தெரு, மாதா கோவில் தெரு.
ஆலந்தூர்: எம்.கே.என்.ரோடு, ஆஷர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மென்ட், திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் குடியிருப்புகள், முத்தாயாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணாடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
பாமக கட்சி தற்போது ராமதாஸ் அணி அன்புமணி அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






