என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடுகள் தொடர்ந்து சத்தமிட்டு வருவதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் பா.ஜ.க. மகளிரணியினர் புகார் தெரிவித்தனர்.
    • மண்டபத்திற்கு அருகில் விற்பனைக்காக ஏற்கனவே 200 ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 ஆடுகள் அங்கு அழைத்து வரப்பட்டன.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

    முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.

    தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட் பா.ஜ.க. மகளிரணியினர் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை அடைத்துள்ள பகுதிக்கு அருகிலேயே பா.ஜ.க.வினர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆடுகள் தொடர்ந்து சத்தமிட்டு வருவதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் பா.ஜ.க. மகளிரணியினர் புகார் தெரிவித்தனர். ஆடுகளின் சத்தத்தால் மகளிரணி நிர்வாகிகள் கண்டன முழக்கமிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்திற்கு அருகில் விற்பனைக்காக ஏற்கனவே 200 ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 ஆடுகள் அங்கு அழைத்து வரப்பட்டன. இதனால் ஆடுகளுக்கு மத்தியில் கடும் துர்நாற்றம் உள்ள பகுதியில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    • ஸ்டெர்லைட், மீத்தேன், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் போராட்டம் நடத்தியுள்ளேன்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பாக, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தைக் கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். பூமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ரொகையா, மாநில பொருளாளர் செந்திலதிபன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கடந்த ஒரு ஆண்டு காலமாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை. உங்களில் ஒருவரான நான் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டேன். ஸ்டெர்லைட், மீத்தேன், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் போராட்டம் நடத்தியுள்ளேன்.


    முல்லை பெரியாறு அணையை காக்க, 10 லட்சம் விவசாயிகளுடன் நடைபயணம் மேற்கொண்டேன். இதில் கட்சி வேறுபாடின்றி, பல்வேறு தரப்பினர் என்னை வரவேற்றனர். ஒத்தக்கடை யானை மலை பகுதியில் சிற்ப நகர் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நான் போராடியதால், மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும், எனது கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, திட்டத்தை ரத்து செய்தார்.

    தற்போது, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அரிட்டாப் பட்டியில் 5000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது.

    அரிட்டாப்பட்டி பகுதி 3000 ஆண்டு பழமையான பகுதி. மலைகள், சமணர் படுகை, பல்லுயிர் தலம், குடைவரை கோவில்கள் உள்ள பகுதி. ம.தி.மு.க. இருக்கும் வரை இங்கு ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். விரைவில் இந்த பிரச்னை தொடர்பாக அடுத்த கட்ட போராட் டத்தை அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், அரியூர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் வேலூர் மத்திய ஜெயிலில் சிறை நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2019 முதல் 2023 வரை மதுரை மத்திய ஜெயிலில் நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது கைதிகள் தயாரிக்கும் கைவினை பொருட்களுக்கான மூலப் பொருட்களை வாங்குவதாக கூறி ரூ.1 கோடியே 30 லட்சம் ஊழல் செய்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


    இந்தநிலையில் வேலூர் அரியூரில் வசித்து வரும் சிறை நிர்வாக அலுவலர் தியாகராஜன் வீட்டில் இன்று வேலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த சோதனை சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    இன்று காலையில் தலைமை செயலகத்துக்குள் நுழைந்த கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

    தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை எதிரொலி கவே இதுபோன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள் சுற்றுகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் கண்காணித்தனர்.

    • மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது.
    • பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கவும் போலி திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி

    தமிழக பா.ஜ.க. மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டுக் காவலிலும் வைத்திருக்கும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்கும் முயற்சிலேயே திமுக அரசு ஈடுபடுகிறது.

    மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது.

    ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கவும் போலி திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

    வரும் காலங்களில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.



    • மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
    • தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இன்று (வெள்ளிக்கிழமை) வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

    வடிகால் வாய்க்கால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1,023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்.

    மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை.

    இருந்தாலும், தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.
    • தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

    90களில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் புரோட்டா தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம்.

    விருதுநகர் எண்ணெய் புரோட்டா எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை.

    பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

    மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள்.

    அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான்.

    அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள்.

    ஒவ்வொரு கடை சால்னாவும் texture, consistency, taste ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.

    ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராள கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான்.

    சேத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும்.

    விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்டினி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.

    இப்படிப்பட்ட மாவட்டத்தில் உணவு திருவிழா நடத்தினால் எப்படி இருக்கும்? அனேகமாக ஜனவரி 17 மற்றும் 18 தேதிகளில் விருதுநகரில் உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. உணவு மட்டுமின்றி நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் தளவாய் புரம் பகுதிகளில் தான் ஏராளமான நைட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் நைட்டிகள் தவிர எல்லா விதமான ரகங்களிலும் அங்கேதான் நைட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான ரகங்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த உணவுத் திருவிழாக்களில் அதுபோன்ற நைட்டி அவுட்லெட்கள் சிலவற்றை அமைத்தால் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருக்கும். விருதுநகர் மாவட்டத்தின் மற்ற தயாரிப்புகளான நோட்புக்குகள் ஸ்டேஷனரிகள் போன்ற ஸ்டால்கள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் தயைகூர்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எக்ஸ் தளத்தில் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

    உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் நைட்டி உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருட்களை இது போன்ற மக்கள் கூடும் விழாக்களில் சந்தைப்படுத்துகிறோம். இதன் மூலமாக மகளிர் சுய உதவி குழு பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.

    தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.

    சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை ***மாடா நீ என திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

    • 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கேள உள்ளன. பொங்கல் திருநாளையொட்டி 14,15,16 ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை உள்ள நிலையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் அரசு விடுமுறைவிட்டால் 18,19 (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களோடு மொத்தம் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    17-ந்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கொண்டாட திட்டமிட்டுள்ளவர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. அரசு பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. பிற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 6-ந்தேதி முதல் முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். சிறப்பு பேருந்துகள் 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. தினசரி இயக்கக்கூடிய 2092 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகள் நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் பஸ்கள் சென்றடையும் வகையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணம் மேற்கொள்பவர்கள் குழப்பம் இல்லாமல் பயணத்தை தொடர போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமை செயலகத்தில் 6-ந்தேதி (திங்கட்கிழமை) போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார்.

    • பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.
    • கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்.

    பரமபத வாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

    மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
    • நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சுடுகாடுகளில் குப்பைகளை அகற்றினார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    சாலைகள், பஸ்நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், நிழற் கூடங்களில் குப்பைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை அகற்றி வருகிறார்கள். கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 203 சுடுகாடுகளில் தீவிர தூய் மைப்பணி இன்று காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை நடந்தது. சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் மண்டி கிடந்த முட்புதர்கள், செடிகள், குப்பைகள், கட்டிட கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினார்கள். 15 மண்டலத்திற்கு உட்பட்ட சுடுகாடுகளில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் தலைமையில் தூய்மை பணி நடந்தது.

    திருவொற்றியூர் நவீன எரியூட்டும் மயான பூமி, ஈஞ்சம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மயிலாப்பூர், ஆலப்பாக்கம், புழல், எண்ணூர், சாந்தி நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சுடுகாடுகளில் குப்பைகளை அகற்றினார்கள்.

    பொதுவாக மயானங்களில் தூய்மைப் பணி நீண்ட காலமாக செய்யாததால் குப்பைகள், சடங்குகள் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கழிவுகள் ஆங்காங்கே கிடந்தன. அவற்றை சேகரித்து லாரிகளில் ஏற்றினர். மரம், செடி களின் இலைகள் உதிர்ந்து குப்பைகளாக காட்சியளித்தன. அவையெல்லாம் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    • தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
    • பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.

    மதுரை:

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    இந்த ஆண்டு முதல் போட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கிறது. இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில்,

    அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் ஏற்பாடு செய்யும் ஜல்லிக்கட்டு அல்லது கிரிக்கெட் போன்றவற்றை நடத்தலாம். தற்போது மாமதுரை அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வழக்கம்போலவே வீரர்களும், காளை உரிமையாளர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவாகும் எண்ணிக்கை அடிப்படையில், காளைகள் அவிழ்க்கப்படும்.

    இதுகுறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் வெளியிடுவார் என்றார்.

    இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழு அறிவித்துள்ளது.

    ×