மத்திய அரசின் நிகழ்ச்சியில் உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்

ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் நிகழ்ச்சியில் உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்
Published on

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.

சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை ***மாடா நீ என திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com