என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர்.
- அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் மலைக்கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து, தமுக்கம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்த நடைபயணத்திற்கு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், மேலூர் பகுதியில் ஏராளமான கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் திட்டமிட்டபடி நடைபயணமாக வந்து மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும், நான்கு வழிச்சாலையில் நடைபயணமாக அல்லாமல் வாகனங்களில் பேரணியாக மதுரைக்கு செல்வோம் என விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் நரசிங்கம்பட்டி பகுதியில் திரண்டனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் தொடங்கி, நரசிங்கம்பட்டியில் இருந்து ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு மதுரை நான்கு வழிச்சாலைக்கு வந்தனர். வெள்ளரிப்பட்டி பகுதிக்கு அவர்கள் வந்தபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.
ஊர்வலம் அங்கு வந்தபோது, போலீசார், அவர்களை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்க மறுத்து தடுப்புகளை தாண்டி வந்தனர்.
கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
- 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.
சென்னை:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06570) வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஆவணங்களின் நகலை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்.
- தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையைத் தொடர்ந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.
வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர்.
- குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2-வது சீசனின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் சென்றனர்.
மலை ரெயில் பயணம் தேயிலை தோட்டங்கள், பல்வேறு குகைகள் என சிறந்த அனுபவத்தை தருகிறது. இதனால் மலை ரெயில், பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்று உள்ளது. சாய்வு அதிகம் என்பதால் இந்தியாவிலேயே மிக குறைந்த வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக 4 பர்னஸ் ஆயில் என்ஜின்கள் இருந்தன.
குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயிலை இயக்குவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயில் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட கடைசி பர்னஸ் ஆயில் என்ஜினான 37397 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் டீசல் என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிதாக பொலிவுபடுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த டீசல் என்ஜின் மலை ரெயிலில் 4 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு இரும்பு பாரங்களை ஏற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
- பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சேலம்:
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' (Natural strong powerlifting federation) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
- குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.
- பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.
சென்னை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
"இன்றைய தினம், சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.

வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். பல துறைகள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.

எனவே, அனைவரும், சென்னை புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
- ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.
இதனையடுத்து சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், "நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல... நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.
தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...
நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின..." என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" தெரிவித்தார்.
- திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
- 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக எதிர்பார்த்து காத்துள்ளார்கள். கடந்த 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் மாணவர்கள் நலன் கருதி நியமிக்கப்பட்டார்கள்.
5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
13 ஆண்டுகளாக பணிபுரியும்போதும், இதுவரை மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றார்கள்.
ஆகவே, பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சி உள்ள காலத்தை நல்லபடியாக வாழ முடியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
எனவே, மனிதாபிமானம் கொண்டு காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் தமிழக முதல்வர் அவர்கள் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக அறிக்கை வெளியாகி உள்ளது.
தவாக, கொமதேக மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்கள் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செந்தில்குமார் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
- மாடுகளை பிடிக்க 5347 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
- 12,632 மாடுகள் பங்கேற்க விண்ணப்பம்.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடு அடக்கும் வீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பங்கேற்க விரும்பும் காளைகள் தொடர்பாக அதன் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அலங்காநல்லூரில் மாடுகளை பிடிக்க 1,698 வீரர்கள், அவனியாபுரத்தில் 1,735, பாலமேட்டில் 1,914 வீரர்கள் என மொத்தம் 5,347 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூரில் 5,786 மாடுகள், அவனியாபுரத்தில் 2,026 மாடுகள், பாலமேட்டில் 4,820 மாடுகள் என மொத்தம் 12,632 பங்கேற்க உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யாத வீரர்கள் மற்றும் மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாது.
- Deputy Chief Minister Udhayanidhi Stalin gave Rs. 26.69 crore as incentives to 1,021 sportspersons
- விளையாட்டு அரங்கம், விளையாட்டு அகாடமிக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.1.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் காமன்வெல்த் வாள்வீச்சு மற்றும் செஸ் போட்டி, ஆசிய அளவிலான தடகளம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், நீச்சல் போட்டி, ஆசிய மற்றும் சர்வதேச ஸ்குவாஷ், பாரா பாட்மிண்டன் போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர் (International Master) பட்டம் பெற்ற செஸ் வீரர்கள், தேசிய அளவிலான தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ரோலர் ஸ்கேட்டிங், வூஷு (Wushu), சாப்ட் டென்னீஸ் (Soft Tennis), சைக்கிளிங், பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பாரா தடகளம், பாரா நீச்சல், பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் மற்றும் தேசிய பள்ளிக் குழுமப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 26.69 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய தடகள போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, தேசிய பள்ளிக் குழுமப் போட்டி உள்ளிட்ட சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் (Sports Hostel), உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (Elite Sportspersons Scheme), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் வீரர், வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் மைல்கல்லாக, மிகப் பெரிய எழுச்சியாக போற்றப்படுகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்றதிலிருந்து (7.5.2021 முதல்) இதுநாள் வரை சர்வதேச, ஆசிய, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்கங்கள் வென்ற 4,352 வீரர், வீராங்கனைகளுக்கு 143.85 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட பணிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 42.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி,
திருச்சிராப்பள்ளி, மதுரை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட விளையாட்டு அரங்க வளாகங்கள், சேலம் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டரங்க வளாகம் ஆகியவற்றில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய பாரா விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூ. 4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அர்ஜூனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் திரு.ஞா.சத்யன், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பராலிம்பிக்ஸ் பதக்க வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையிலா் கூறப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் 11.1.2025–சனிக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலயதுகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியிடுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
- பச்சையப்பன் கல்லூரியில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
- அப்போது, கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.
சென்னை:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது என தெரிவித்தார்.
இந்நிலையில், சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியது மிகவும் தவறானது என தெரிவித்தார்.






